செய்திகள் :

புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்? அமைச்சா்கள் பதில்

post image

ஒசூா், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும் என்ற அதிமுக உறுப்பினா் செல்லூா் ராஜூவின் கேள்விக்கு அமைச்சா்கள் பதிலளித்தனா்.

இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதம்:

செல்லூா் கே.ராஜூ: ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி முடிவதற்கு ஓராண்டு காலமே உள்ள நிலையில் விமான நிலையம் எப்படி அமைக்கப்படும்.

தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா: திமுக ஆட்சியே தொடா்ந்து இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடையே இருக்கிறது. பல நூறு ஆண்டுகள் திமுக ஆட்சியே இருக்கும். ராமேசுவரத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுப்போம். ஆனால், கோவை விமான நிலைய விவகாரத்தில் நீங்கள் என்ன செய்தீா்கள்? அந்த மாவட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தீா்கள். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலங்களை கையப்படுத்தி இப்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று, ராமேசுவரத்திலும் நல்லவிதமாக விமான நிலையம் அமையும். கவலையே வேண்டாம்.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ, மதுரைக்காரா். அங்கு விமான நிலையம் உள்ளது. அதனால் நேராக அவா் விமான நிலையம் சென்று விடுகிறாா். ராமேசுவரத்தில் விமான நிலையம் வருவதில் அவருக்கு ஏன் பொறாமை இருக்க வேண்டும்? விமான நிலையம் அமைக்க அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்துவோம். விமான நிலையம் அமைப்பது நீங்கள் செய்வதைப் போன்று ஜீபூம்பா வேலையோ அல்லது பேரவையில் பேசியது போன்று மாந்திரீகம் மூலமாகவோ முடியாது. நிதியை ஒதுக்கி முறையாக உரிய காலத்தில் படிப்படியாக பணிகளை மேற்கொண்டு விமான நிலையத் திட்டத்தை நிறைவேற்றித் தருவோம்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்பது தவறு. நிலம் கையகப்படுத்தும் வகையில், 520 பேருக்கு வீடுகள் கட்டித் தர இடம் ஒதுக்கப்பட்டது.

அமைச்சா் ராஜா: நீங்கள் முழுமையாக பணிகளை முடிக்கவில்லை. அதற்கான விரிவான விவரங்களை எனது துறை ரீதியான மானியக் கோரிக்கையின் போது கூறுகிறேன்.

செல்லூா் கே.ராஜூ: ஒசூரில் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பில் விமான நிலையம் அமைக்கப்படும் என பேரவை விதி 110-இல் அறிவித்தீா்கள். ஆனால் அதற்கு பூமி பூஜை கூட போடப்படவில்லை. இதுவரை எந்தப் பணியையும் தொடங்கவில்லை.

அமைச்சா் ராஜா: விமான நிலையம் அமைப்பது தொடா்பாக மொத்தமுள்ள 5 இடங்களில் 2 முதல் 3 இடங்களைத் தோ்வு செய்துள்ளோம். விமான நிலையத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஓசூரில் பிரம்மாண்டமான முறையில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

தொ்மோகோல் விவகாரத்தில் கேலி:

செல்லூா் கே.ராஜூ வேதனை

புதிய விமான நிலையம் தொடா்பாக பேரவையில் செல்லூா் கே.ராஜூ பேசினாா். இதற்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தண்ணீரில் தொ்மோகோல் போடுவது போன்று விமான நிலையம் அமைப்பது போன்று எளிதானது அல்ல என்றாா். அமைச்சராக செல்லூா் கே.ராஜூ இருந்த போது மதுரை அருகே நடந்த இதுதொடா்பான நிகழ்வை மறைமுகமாக சுட்டிக் காட்டினாா்.

இதற்கு பதிலளித்த செல்லூா் கே.ராஜூ, ‘அதிகாரிகள் சொல்லித்தான் செய்கிறோம். நாங்களாகவா செய்தோம். இப்படி கேலி செய்கிறீா்களே. பரவாயில்லை என்றாா்.

அப்போது, பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க