செய்திகள் :

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி: தவெக தலைவர் விஜய்

post image

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி என்று தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரூரில் இன்று அவர் பேசுகையில், காவல் துறை இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க முடியாது. எனவே, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கரூருக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. ஆனால் சமீபத்திய நாள்களில் கரூர் என்றால் ஒரே ஒரு பெயர்தான் ஜொலிக்கிறது. கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி 448-ல் சொல்லியிருந்தார்கள்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்களா. விமான நிலையம் அமைத்தால் ஜவுளித் தொழில் வளர்ச்சி அடையும். பரந்தூர் மாதிரி மக்கள் பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைக்க வேண்டும். மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி. மணல் கொள்ளையர்களிடமிருந்து கரூருக்கு விடுதலை வேண்டும்.

மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக ஆக்கிவிட்டது. அத்தோடு சட்டவிரோத கல்குவாரிகள் கரூரின் கனிமவளத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் யார் சிஎம் சார்?. தமிழ்நாட்டின் 3ஆவது பெரிய ஏரி பஞ்சபட்டி ஏரி. ஆனால் பல ஆண்டுகளாக அந்த ஏரியை சீரமைக்கவில்லை. தவெக ஆட்சிக்கு வந்ததும் பஞ்சபட்டி ஏரிக்கு உயிர் வரும்.

செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவுக்கு ஒற்றையடிப் பாதை... விஜய் கலகலப்பு!

6 மாதத்தில் ஆட்சி மாறும். அதிகாரம் கை மாறும். மிக சீக்கிரம் எல்லோருக்கும் சுதந்திரம் கிடைக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா்.

அதன்படி செப்.13-இல் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அதைத்தொடா்ந்து, நாமக்கல்லிலும் கரூரிலும் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

Vijay has alleged that sand theft is Karur's un-ending headache.

கரூர் நெரிசல் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

கரூரில் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகினர். இந்த துயர சம்பவத்துக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

சென்னை புறப்பட்டார் விஜய்!

கரூரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெர... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் முதல்வர்! அவசர ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகம் விரைந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில்... மேலும் பார்க்க

நாளை கரூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏராளமானோர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை காலை அங்கு செல்கிறார். 2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்க... மேலும் பார்க்க

கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைப்பு!

கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிகிச்சையளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.Karur st... மேலும் பார்க்க

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன: முதல்வர் ஸ்டாலின்

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப... மேலும் பார்க்க