செய்திகள் :

மறைந்தார் `இந்திய கிச்சன் கிங்' டி.டி.ஜெகநாதன்; 1959-ல் இந்திய குடும்பங்களுக்கு ஒரு மாற்றம் தந்தவர்!

post image

டி.டி.கே நிறுவனத்தின் முன்னாள் சேர்மனும், பிரபல தொழிலதிபருமான `இந்திய கிச்சன் கிங்' டி.டி. ஜெகநாதன் (77) நேற்று (அக்டோபர் 10) பெங்களூரூவில் உயிரிழந்தார்.

இவரின் இழப்பு குறித்து டி.டி.கே குரூப், "அவரின் திடீர் மறைவு நிறுவனத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர்கள், ஊழியர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறது.

TT Jagannathan - டி.டி.ஜெகநாதன்
TT Jagannathan - டி.டி.ஜெகநாதன்

யார் இந்த டி.டி. ஜெகநாதன்?

தனது தாத்தா டி.டி.கிருஷ்ணமாச்சாரியால் 1928-ல் ஆரம்பிக்கப்பட்டு, 1950-களில் தனது தந்தை நரசிம்மன் நிர்வாகத்தில் திவாலை நோக்கி சென்றுகொண்டிருந்த டி.டி.கே நிறுவனத்தின் பாதையை லாபத்தை நோக்கியும், இந்திய சமையலறைகளில் புரட்சியையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியவர் டி.டி. ஜெகநாதன்.

அதாவது டி.டி.கே நிறுவனம், தொடங்கப்பட்ட காலகட்டத்தில் பல பொருள்களைத் தென்னிந்தியா முழுவதும் விநியோகம் செய்து லாபகரமானதாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் நிறுவனர் கிருஷ்ணமாச்சாரிக்கு 1930 பிற்பகுதியில் அரசியல் ஆர்வம் தலைதூக்க, தனது மூத்த 17 வயது மகன் நரசிம்மனிடம் நிர்வாகப் பொறுப்பு வந்தது.

1940-கள் தொடக்கத்தில் லீவர் நிறுவனம் தனது பொருள்களை விநியோகம் செய்ய இடைத்தரகர்கள் வேண்டாம் என்று கூறவே அதுவரை அதன் பொருள்களை விற்பனை செய்துவந்த டி.டி.கே நிறுவனம் இறங்குமுகத்தில் சென்றது.

பின்னர், 1946-வாக்கில் அமெரிக்காவின் ஹென்றி ஷெமூர் அண்ட் வி.ஏ.டாட்ஜ் நிறுவனத்தின் பொருள்களை விநியோகம் செய்யும் ஏஜெண்டாக டி.டி.கே நிறுவனம் மாற நிலைமை கொஞ்சம் சீரானது.

சுதந்திரத்துக்குப் பின் நேரு அமைச்சரவையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக கிருஷ்ணமாச்சாரி பதவி வகித்தபோது, 1952-ல் பொருள்களின் இறக்குமதி தடைசெய்யப்படவே, டி.டி.கே நிறுவனம் விநியோகம் செய்துவந்த பொருள்களின் விநியோகம் பாதித்தது.

TT Jagannathan - டி.டி.ஜெகநாதன்
TT Jagannathan - டி.டி.ஜெகநாதன்

கிருஷ்ணமாச்சாரி தொழில்துறை அமைச்சராக இருந்ததாலே நரசிம்மனால் பிசினஸ் தொடர்பாகச் செல்ல முடியாமல் போனது. 1958-க்குப் பிறகு இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வந்த பொருள்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார்.

பால்பாயின்ட் பேனா, மேப், அட்லாஸ் உட்பட ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்து விற்கத் தொடங்கியது டி.டி.கே குரூப் நிறுவனம். ஆனால், உற்பத்திச் செலவால் கடன் சுமையும் அதிகரித்தது.

அப்போது, சென்னை ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் கோல்டு மெடல் வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நரசிம்மனின் மகன் டி.டி. ஜெகநாதன், உடனடியாக சென்னை வந்து தந்தைக்கு உதவும் வகையில் நிர்வாகப் பொறுப்பில் ஈடுபட்டார்.

இந்த இடத்தில்தான் மேற்குறிப்பிட்டவாறு நிறுவனத்திலும், இந்திய சமையலறைகளிலும் புரட்சி செய்தார் டி.டி.கே ஜெகநாதன். 1959-ல் ‘ப்ரஸ்டீஜ் ப்ரஷர் குக்கரை’ அறிமுகப்படுத்துகிறார் டி.டி.கே ஜெகநாதன்.

இன்று குக்கரில் சாதம், காய்கறிகள் போன்றவை போட்டுவிட்டு விசிலடிக்கும் வேளையில் பார்த்துக்கொள்ளலாம் என ஆசுவாசம் தரும் இந்த குக்கர், அன்றைய காலகட்டத்தில் குடும்பப் பெண்களுக்கு எத்தகைய நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

டி.டி.கே ப்ரஸ்டீஜ் நிறுவனத்தின் பேரில் வீட்டுக்கும், சமையல்கட்டுக்கும் தேவைப்படும் வகையில் சுமார் 600 பொருள்களை விற்பனை செய்து வருகிறது டி.டி.கே குரூப். இந்திய குடும்பங்களின் சமையலறைகள் ப்ரஸ்டீஜ் மயமாகின.

TT Jagannathan - டி.டி.ஜெகநாதன்
TT Jagannathan - டி.டி.ஜெகநாதன்

உள்நாட்டைத் தாண்டி உலக அளவில் நிறுவனம் விரிவடைந்தது. டி.டி.கே ப்ரஸ்டீஜ் நிறுவனத்தில் 1975 முதல் 2000 வரை நிர்வாக இயக்குநராகவும், 2000 முதல் 2019 வரை எக்ஸிகியூட்டிவ் சேர்மனாகவும் (Executive Chairman), 2019 முதல் 2025 மார்ச் வரையில் நான்-எக்ஸிகியூட்டிவ் சேர்மனாகவும் (Non Executive Chairman) செயல்பட்டு நிறுவனத்தை வானுயரத்துக்கு கொண்டு சென்றார்.

டி.டி.கே நிறுவனத்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் சந்த்யா மெண்டோன்காவும் இணைந்து `டிஸ்ரப்ட் அண்ட் கான்குயர் (Disrupt & Conquer – How TTK Prestige Became a Billion Dollar Company)’ என்ற பெயரில் நிறுவனம் கடந்து வந்த பாதைகளைப் புத்தகமாக வடித்திருக்கிறார் டி.டி.ஜெகநாதனும்.

GRT: தங்க தீபாவளிக்கு இரட்டிப்பு சந்தோஷம்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964 ஆம் ஆண்டுதொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அவர்களின், காலத்தால் அழியாத வடிவமைப்புகள், சிறந்த கைவினைத... மேலும் பார்க்க

சென்னை: பூந்தமல்லியில் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 7 வது கிளை திறப்பு

போத்தீஸ் குழுமத்தின், அங்கமான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தனது 7வது கிளையை, சென்னை பூந்தமல்லியில் Oct 5ம் தேதி துவங்கி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் நகை க... மேலும் பார்க்க

பிரின்ஸ் ஜுவல்லரி: பழைய தங்கத்திற்கு புதிய மதிப்பு தரும் Gold Exchange Festival

தென் இந்தியாவின் மிக நம்பகமான நகைக்கடைகளில் ஒன்றான பிரின்ஸ் ஜுவல்லரி, தனது Gold Exchange Festival-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் பழைய, பயன்படுத்தப்படாத நகைகள... மேலும் பார்க்க

`டவுசர் கடை' சாப்பாடு: கோலா உருண்டை முதல் மட்டன் சுக்கா வரை; 81 வயதில் அசத்தும் ராஜேந்திரன் தாத்தா

சென்னை மந்தைவெளி டவுசர் கடைஒவ்வொரு நாகரிக சூழலுக்கு ஏற்றவாறு காலந்தோறும் உணவு முறையும் அதன் மீதான மோகமும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். ஆனால் 1977-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு உணவகம் இன்றும்... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 42: "பாலில் கொட்டிக் கிடக்கும் லாப பிசினஸ்" - நம்பிக்கை தரும் `தமிழ் பால்' நிறுவனம்

உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2023-24ம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 239.3 மில்லியன் டன்னைத் தாண்டி சாதனை படைத்தது. உலக விநியோகத்தில் சுமார் 25 சதவிகித பங்களிப்பு... மேலும் பார்க்க

GRT: அன்னதானம், சத்திர கட்டுமானத்திற்காக ரூ. 50 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி அதன் பிறகு மதிப்பை உருவாக்குவதில் உள்ளது என்று நம்புகிறது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நிற... மேலும் பார்க்க