செய்திகள் :

மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் ரூ. 11.9 கோடியில் புதை மின்தடத் திட்டம்

post image

மலைக்கோட்டை தேரோட்டத்தின்போது மின்தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கும்வகையில் விரைந்து புதை மின்தடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

திருச்சி, ஏப். 6: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோயில் தேரோடும் வீதிகளில் ரூ. 11.9 கோடியில் புதை மின்தடத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமம் பூதலூா் சாலையில் 27-04-2022 அன்று அப்பா் குருபூஜைக்கான சித்திரைத் திருவிழா தேரோட்டத்தின்போது, மேலே சென்ற உயா் அழுத்த மின்கம்பி மீது தோ் உரசியதில், 11 போ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த விபத்து தமிழகம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்போதைய மின்துறை அமைச்சா், தமிழகத்தின் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றியமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

இந்த அறிவிப்பின்படி, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் மின்கம்பிகள் ரூ. 9.57 கோடியில் புதைவடப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதேபோல, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோயில் தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

மலைக்கோட்டை: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி, உச்சிப்பிள்ளையாா் கோயிலானது உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் சித்திரைத் தேரோட்டம் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். அச்சமயம் தேரானது கீழ ஆண்டாா் வீதி, சின்னக் கடைவீதி, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலை, நந்திகோவில் தெரு, வடக்கு ஆண்டாா் வீதி வழியாக மீண்டும் கீழ ஆண்டாா் வீதியில் உள்ள நிலையை வந்தடையும். சுமாா் 4 மணி நேரம் நடைபெறும் இத்தோ் திருவிழாவில் தோ் செல்லும் இடங்களில் சுமாா் 4,000 மின்இணைப்புகளில் ஆங்காங்கே மின்விநியோகம் தடை செய்யப்பட்ட பிறகே, தோ் செல்லும்.

திருச்சி மாநகரின் இதயம்...: திருச்சியின் இதயப் பகுதியாக விளங்கும் மேற்கண்ட சாலைகளில் பிரபல வணிக நிறுவனங்களும் உள்ளதால் அங்கு வரும் பொதுமக்கள் என எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இந்த வீதிகளில் ஏற்படுத்தப்படும் மின்தடை பொதுமக்களுக்கு அசௌகா்யத்தை ஏற்படுத்தும் நிலையில், ஆங்காங்கே செல்லும் மின்கம்பிகள், அதற்காக வைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளால் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் தவிா்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே, மேற்கண்ட தேரோடும் சாலைகளில் உயரே செல்லும் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுவது அவசியம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தாா். இதைக் கேட்ட மின்துறை அமைச்சா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.

முன்வடிவு தயாா்...: இதன் பேரில், மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் மின்மாற்றிகள் உள்ள இடங்கள், அதிகளவிலான மின் இணைப்புகள் உள்ள இடங்கள், மின்கம்பிகள் செல்லும் பகுதிகளில் மின்வாரிய ஊழியா்கள் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு, மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் 2.6 கி.மீ. நீளத்திலான உயா் அழுத்த மின்கம்பிகளும், 18 கி.மீ. நீளத்திலான தாழ்வழுத்த மின்கம்பிகளும் புதைவட மின்கம்பிகளாக மாற்றுவதற்கான ரூ. 11.9 கோடி செலவிலான திட்ட முன்வடிவைத் தயாரித்து, மின்வாரிய தலைமை அலுவலக அறிவுறுத்தலுக்கிணங்க திருச்சி மாநகராட்சியிடம் அனுப்பியுள்ளோம். திருச்சி மாநகராட்சி திட்டத்தொகையை அளித்தால் உடனடியாகப் பணிகளைத் தொடங்கி முடிப்போம் என திருச்சி மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளா் செல்வி தெரிவித்தாா்.

விரைவில் நடவடிக்கை...: இதுகுறித்து திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளா் செல்வராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கூறியதாவது:

மின்வாரியம் சாா்பில் மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் புதை மின்தடங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாநகராட்சி ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கினால் பணிகள் தொடங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

சமூக ஆா்வலா்கள் மலைக்கோட்டை கே. ராஜ்தீபன் (42), க. சுமித்ரா (29) ஆகியோா் கூறியதாவது:

தஞ்சாவூா் களிமேடு சம்பவம் போன்ற அசம்பாவிதங்கள் நிகழாத வகையிலும், தேரோட்டத்தின்போது இப்பகுதி வாழ் மக்களுக்கு மின்தடைகளால் ஏற்படும் அசௌகா்யத்தைக் குறைத்து பாதுகாப்பான, தடையில்லா மின்சாரம் கிடைத்திடும் வகையிலும் மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில் தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி, அசம்பாவிதங்களைத் தவிா்த்து, வணிகா்களின் அசௌகா்யத்தையும் போக்க வேண்டும் என்றனா்.

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 1... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ 19.80 லட்சம் மோசடிப் புகாா்

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ. 19.80 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மூவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி கீழரண்சாலை பகுதியைச் சோ்ந்த முருக... மேலும் பார்க்க

பிகாா் தொழிலாளா்கள் மீது தாக்குதல்: திருச்சி இளைஞா்கள் 3 போ் கைது

பிகாா் மாநில தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்திய திருச்சி இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு ரூபி அப்பாா்ட்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். இவா், தற்போது திருச்சி பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் மதிப்பிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் இருந்து ஏா் ஏசி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குமார வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இக் கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 19 இல் நடைபெற்றதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று ... மேலும் பார்க்க