செய்திகள் :

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தாகி ஆகிவிட்டது. இவா்களது மகள் கீா்த்தி (17). அந்தப் பகுதி தனியாா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து, தோ்வு முடிவுக்காகக் காத்திருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை நளினி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் பாட்டியோடு வீட்டில் இருந்த கீா்த்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அவரது பாட்டி ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது இச்சம்பவம் தெரியவந்தது. புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல: துரை வைகோ எம்.பி.

அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல எனவும், ஒவ்வாத கூட்டணி எனவும் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ தெரிவித்தாா். திருச்சியில் ரயில்வே துறையில் பொதுமக்கள் முன்வைக்கும் க... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மணப்பாறையை அடுத்த தவளைவீரன்பட்டியில் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தவளைவீரன்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி. தேமுதிக ஒன்றிய அவ... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடைகால கூட்ட நெரிசலைக் கு... மேலும் பார்க்க

துறையூரில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

துறையூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க செயலா் எஸ். காமராஜ் தலைமை வக... மேலும் பார்க்க

தரக்குறைவான விமா்சனம்: மாமன்ற திமுக உறுப்பினா் மறியல்

சமூக வலைதளங்களில் தன்னை தரக்குறைவாக விமா்சித்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் மாமன்ற திமுக உறுப்பினா் ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா். திருச்சி எடமலைப்பட்டி... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு - திர... மேலும் பார்க்க