செய்திகள் :

நடிகர், இசையமைப்பாளர் இல்லாமல் திரைப்படம்; ஏஐ உதவியுடன் கன்னட திரையுலகில் புதிய மைல்கல்!

post image

கன்னட திரையுலகில் புதிய மைல்கல்லாக, முழுவதும் செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூருக்கு அருகிலுள்ள சித்தேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி லவ் யூ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள், இசைக்குழுவினர் என மனிதர்களுக்குப் பதிலாக, முழுக்கமுழுக்க செயல் நுண்ணறிவு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நூதன் என்கிற கிராஃபிக் டிசைனரின் உதவியுடன் லவ் யூ படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முழுப்படமும் வெறும் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில், வெறும் ஆறுமாத காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட்டில் பெரும்பாலும் மென்பொருள் உரிமத்துக்காகவே செலவிடப்பட்ட இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நரசிம்ம மூர்த்தியே எழுதியுள்ளார்.

இரு நபர்கள் மட்டுமே சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்துக்கு, யு/ஏ (U/A) சான்றிதழை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கியுள்ளது.

6 மாதங்களுக்கு முன்னரே, 30 வெவ்வேறு செயல் நுண்ணறிவுக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், தற்போதைய வளர்ச்சியடைந்த செயல் நுண்ணறிவு உதவியுடன் இயக்கினால், ஆயிரம் மடங்கு மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று இருவரும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!

நிறம் மாறும் உலகில்: ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் இயக்கிய ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் ’நிறம் மாறும் உலகில்' எனும் பட... மேலும் பார்க்க

40 ஷாட்டுகள்..! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய பார்சிலோனா!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.லூயிஸ் கம்பெனிஸ் ஒலிம்பிக் திடலில் நடைபெற்ற இன்றைய (ஏப்.23) போட்டியில் பார்சிலோனா அணியும் மல்லோர்கா அணியும் மோதின. இந்தப் ப... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி பட டிரைலரை வெளியிட்ட அட்லி!

இயக்குநர் அட்லி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் சிம்ரன்,... மேலும் பார்க்க

கணவன் - மனைவி குறித்து உருவ கேலி... நடிகை வைஷ்ணவி வருத்தம்!

கணவன் - மனைவி இடையே இருக்கும் மனபொருத்தத்தைவிட சிலருக்கு உருவ கேலியே பெரிதாகத் தெரிகிறது என சின்ன திரை நடிகை வைஷ்ணவி வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரில் ந... மேலும் பார்க்க

கோழைத்தனமான செயல்: பெஹல்காம் தாக்குதலுக்கு விஜய் தேவரகொண்டா ஆவேசம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா பெஹல்காம் தாக்குதல் குறித்து மிகவும் ஆவேஷமாக பேசியுள்ளார். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து எனப்படும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (ஏ... மேலும் பார்க்க