செய்திகள் :

Pahalgam Attack: ``என் வாழ்வில் சிறந்த மனிதர்..'' - திருமணமான 4 நாளில் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணியில் பாதுகாப்புத் துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்தத் தாக்குதலை நடத்திய கோழைத்தனமான தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் கும்பலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.

தாக்குதல் நடந்த இடத்தில் லெப்டினன்ட் வினய் நர்வால், அவரது மனைவி
இதில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இன்று டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி திருமணத்தை முடித்து மனைவியுடன் சுற்றுலா சென்ற இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். திருமணமான 4 நாள்களில் கணவனை இழந்த அவரது மனைவி சம்பவ இடத்திலேயே அவரது உடலை மடியில் வைத்து கதறி அழுத புகைப்படங்கள் பார்ப்பவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

இன்று (ஏப்ரல் 23) டெல்லியில் லெப்டினன்ட் வினய் நர்வால் அவர்களின் உடலுக்கு அரசு மாரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டது. கணவரின் உடலுக்கு இறுதி மாரியாதை செய்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், "என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த மனிதர் நீங்கள்தான். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

அவர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். இந்த உலகம் பாதுகாப்பாக இருக்க அவரும் காரணமாக இருந்திருக்கிறார். நாம் அனைவரும் அவரைப் பற்றி எல்லா வகையிலும் பெருமைப்பட வேண்டும்" என்று கண்ணீருடன் கணவரின் உடலுக்கு மரியாதை செய்தார்.

அவரது குடும்பத்தினர், "அரசாங்கம் இப்படி கொடூரத் தாக்குதல் நடத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கி, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், ” என்று ஆதங்கத்துடன் அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.

லெப்டினன்ட் வினய் நர்வாலின் இறுதி அஞ்சலி இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், லெப்டினன்ட் வினய் நர்வால், உயிரிழக்கும் முன்பு தாக்குதல் நடந்த இடத்தில் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ வைரலாகி, பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த 5 அதிரடி முடிவுகள்

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று (ஏப்ரல் 22) கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இந்திய கடற்பட... மேலும் பார்க்க

Pahalgam Attack: "விரைவில் தீவிரவாதிகளைப் பிடிப்போம்; தக்க பதிலடி கொடுக்கப்படும்..." - ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்த... மேலும் பார்க்க

சமாதானபுரம்: அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுமா? - வெயிலில் சிரமப்படும் பயணிகள்

திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதியான சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வல்லநாடு, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்குச் செல்... மேலும் பார்க்க

`மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமில்லை; ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்!’ - பட்னாவிஸ் பதில்

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா கல்வியாளர்களும் இத்திட்டத்திற்... மேலும் பார்க்க

Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள்!

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள (Pahalgam) சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க

PTR: `அது அவருக்கே பலவீனமாக மாறிவிடும்; புரிந்துக் கொள்வார் என...' - பி.டி.ஆருக்கு ஸ்டாலின் அறிவுரை!

நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்... மேலும் பார்க்க