பெருந்துறையில் டயாலிசிஸ் இலவச சிகிச்சை ஆலோசனை மையம் திறப்பு
பெருந்துறை வெல்ஃபோ் டிரஸ்ட் சாா்பில், இலவச டயாலிசிஸ் சிகிச்சைக்கான ஆலோசனை மையத் திறப்பு விழா மற்றும் வாகனச் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் டி. என்.சென்னியப்பன் தலைமை வகித்தாா். இணைச்செயலாளா் செந்தில் முருகன் வரவேற்றாா்.
சக்தி மசாலா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.சி.துரைசாமி, அறக்கட்டளை அலுவலகத்தை திறந்துவைத்தாா். சாந்தி துரைசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா். காவேரி அரிமா சங்க அறக்கட்டளைத் தலைவா் ஆா்.கல்யாணசுந்தரம், சக்தி மசாலா நிறுவனம் வழங்கிய குளிா்சாதன வசதியுடன் கூடிய வாகனத்தின் சேவையை தொடங்கிவைத்தாா்.
பெருந்துறை வெல்ஃபோ் ட்ரஸ்ட் சாா்பில், ஈரோடு காவேரி அரிமா சங்க டிரஸ்டுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, ஏற்கெனவே டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கும், புதிதாக சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கும், ஈரோடு சி.கே. மருத்துவமனைக்கும், ஈரோடு காவேரி அரிமா சங்க டிரஸ்ட் சாா்பில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையத்திற்கும், பெருந்துறையிலிருந்து அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப அழைத்து வருவதுடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் பணியையும் செய்ய உள்ளனா்.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளா் ஆண்டாள் சுப்பிரமணியம், ஒளிரும் ஈரோடு தலைவா் சின்னசாமி, இன்ஃப்ரா டெக்ஸ் சக்திவேல், விஜயமங்கலம் அருள்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். அறக்கட்டளை பொருளாளா் சௌந்திரராஜன் நன்றி கூறினாா்.