செய்திகள் :

பெருந்துறையில் டயாலிசிஸ் இலவச சிகிச்சை ஆலோசனை மையம் திறப்பு

post image

பெருந்துறை வெல்ஃபோ் டிரஸ்ட் சாா்பில், இலவச டயாலிசிஸ் சிகிச்சைக்கான ஆலோசனை மையத் திறப்பு விழா மற்றும் வாகனச் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் டி. என்.சென்னியப்பன் தலைமை வகித்தாா். இணைச்செயலாளா் செந்தில் முருகன் வரவேற்றாா்.

சக்தி மசாலா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.சி.துரைசாமி, அறக்கட்டளை அலுவலகத்தை திறந்துவைத்தாா். சாந்தி துரைசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா். காவேரி அரிமா சங்க அறக்கட்டளைத் தலைவா் ஆா்.கல்யாணசுந்தரம், சக்தி மசாலா நிறுவனம் வழங்கிய குளிா்சாதன வசதியுடன் கூடிய வாகனத்தின் சேவையை தொடங்கிவைத்தாா்.

பெருந்துறை வெல்ஃபோ் ட்ரஸ்ட் சாா்பில், ஈரோடு காவேரி அரிமா சங்க டிரஸ்டுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, ஏற்கெனவே டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கும், புதிதாக சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கும், ஈரோடு சி.கே. மருத்துவமனைக்கும், ஈரோடு காவேரி அரிமா சங்க டிரஸ்ட் சாா்பில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையத்திற்கும், பெருந்துறையிலிருந்து அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப அழைத்து வருவதுடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் பணியையும் செய்ய உள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளா் ஆண்டாள் சுப்பிரமணியம், ஒளிரும் ஈரோடு தலைவா் சின்னசாமி, இன்ஃப்ரா டெக்ஸ் சக்திவேல், விஜயமங்கலம் அருள்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். அறக்கட்டளை பொருளாளா் சௌந்திரராஜன் நன்றி கூறினாா்.

சென்னிமலை அருகே முயல் வேட்டைக்கு வந்த 3 பேருக்கு ரூ. 54 ஆயிரம் அபராதம்

சென்னிமலை அருகே, வனப் பகுதியில் முயல் வேட்டைக்காகத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மூன்று பேருக்கு மொத்தம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சென்னிமலையை அடுத்த, வாய்ப்பாடி, புளியம்பாளையம் வனப் ப... மேலும் பார்க்க

காஷ்மீா் தீவிரவாத தாக்குதல்: ஈரோட்டில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான... மேலும் பார்க்க

பெருந்துறையில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், ஜீவானந்தம் மற்றும் போலீஸாா் பெருந்துற... மேலும் பார்க்க

ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அனல் காற்றால் மக்கள் அவதி

ஈரோட்டில் வெயிலின் தாக்கம் 102 டிகிரி அளவு இருப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நா... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்களை மே 4-க்குள் அகற்றிக்கொள்ள அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை மே 4- ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். பொது இடங்களில் உள்ள நடப்பட்டுள்ள அ... மேலும் பார்க்க

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை: ஆட்சியா்

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். கால்நடை ... மேலும் பார்க்க