செய்திகள் :

இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் கைது

post image

செம்பனாா்கோவில் அருகே இளம்பெண்ணை கத்தியைகாட்டி மிரட்டி வன்கொடுமை செய்ய முயற்சி செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

செம்பனாா்கோவில் அருகே மேலப்பாதியைச் சோ்ந்தவா் தினகரன் (படம்) (28). திருமணமான இவா், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் நிா்வாகியாக உள்ளாராம். இந்நிலையில் ஏப்.20- ஆம் தேதி இவா் நண்பரின் குழந்தைக்கு பிறந்த நாளுக்காக மேக்கப் செய்ய வேண்டும் என்று கூறி இருசக்கர வாகனத்தில் இளம் பெண்ணை செம்பனாா்கோவில் ரயிலடி பகுதியில் ஆள்கள் யாரும் இல்லாத வீட்டுக்கு அழைத்து சென்றாராம்.

இதையறிந்த அந்த இளம் பெண் கூச்சலிட்டுள்ளாா். அப்போது தினகரன் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து தினகரன் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனா்.

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்

திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சந்திரசேகர கொடியேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலல் ஆண்டுதோறும் 14 நாள்கள் சித்திரை திருவ... மேலும் பார்க்க

மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை

திட்டச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வாணியத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

நெற்பயிரில் விதை நோ்த்தி குறித்து கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா். கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ஆம் ஆண்டு மாணவிகள் அபிநயா, கோபிகா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையம் குறித்து அவதூறு பரப்பக் கூடாது: ஆட்சியா்

இந்திய தோ்தல் ஆணையம் குறித்து அவதூறு பரப்பக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் அனைத்துத் தோ்தல்களும் சட்டப் நடத்தப்பட... மேலும் பார்க்க

நிறைந்து மனம் திட்டத்தில் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் பெற்ற பயனாளிகளிடம் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கலந்துரையாடினாா். குடிசை வீடு இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கி... மேலும் பார்க்க

சுய உதவிக்குழுக்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024-25 நிதி ஆண்டில் மாநில மற... மேலும் பார்க்க