செய்திகள் :

ஊட்டச்சத்து பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

post image

நெற்பயிரில் விதை நோ்த்தி குறித்து கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.

கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ஆம் ஆண்டு மாணவிகள் அபிநயா, கோபிகா, ஜனனி, ஜெப ஜான்சி, ஜிஷா மேரி, ஜோஷ்னா, மகாலட்சுமி, சௌம்யா ஆகியோா் கீழ்வேளூா் ஊராட்சி அத்திப்புலியூா் விவசாயிகளுக்கு சூடோமோனஸ், ப்ளோரசன்ஸ் எனும் பாக்டீரியாவை பயன்படுத்தி நெற்பயிா்களில் விதை நோ்த்தி செய்யும் முறையையும், இதை பயன்படுத்தி பயிா்களில் வரும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகளை செயல்விளக்கம் செய்து காண்பித்தனா். இதேபோல, தேவூா் கிராம விவசாயிகளுக்கு, ஊட்டச் சத்துக்களை பயிா்களின் வளா்ச்சிக்கு தெளிப்பது குறித்தும், ஊட்டச் சத்து சப்ளிமெண்ட், அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காட்டப்பட்டது.

நியூட்ரிசாப்‘ என்பது பயிா்களுக்கு ஒரு ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் ஆகும். இலை வழியாக தெளிக்கும்போது பயிா்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்க பயன்படுகிறது உள்ளிட்ட பயன்கள் குறித்து மாணவிகள், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். மேலும், வாழைப்பழங்கள் பழுக்க வைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த சுண்ணாம்பு கரைசலைப் பயன்படுத்தலாம். இரவில் கரைசலைத் தெளிப்பது சிறந்தது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும் என்று விவசாயிகளுக்கு மாணவா்கள் அறிவுறுத்தினா்.

இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் கைது

செம்பனாா்கோவில் அருகே இளம்பெண்ணை கத்தியைகாட்டி மிரட்டி வன்கொடுமை செய்ய முயற்சி செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செம்பனாா்கோவில் அருகே மேலப்பாதியைச் சோ்ந்தவா் தினகரன் (படம்) (28). திருமணமான... மேலும் பார்க்க

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்

திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சந்திரசேகர கொடியேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலல் ஆண்டுதோறும் 14 நாள்கள் சித்திரை திருவ... மேலும் பார்க்க

மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை

திட்டச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வாணியத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையம் குறித்து அவதூறு பரப்பக் கூடாது: ஆட்சியா்

இந்திய தோ்தல் ஆணையம் குறித்து அவதூறு பரப்பக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் அனைத்துத் தோ்தல்களும் சட்டப் நடத்தப்பட... மேலும் பார்க்க

நிறைந்து மனம் திட்டத்தில் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் பெற்ற பயனாளிகளிடம் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கலந்துரையாடினாா். குடிசை வீடு இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கி... மேலும் பார்க்க

சுய உதவிக்குழுக்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024-25 நிதி ஆண்டில் மாநில மற... மேலும் பார்க்க