செய்திகள் :

குடிமைப் பணித் தோ்வு: படிக்கும் நேரத்தை விட கருத்தூன்றி படிப்பது முக்கியம் -ஆகாஷ் காா்க்

post image

மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற படிக்கும் நேரத்தைக் காட்டிலும் ஆழமாக கருத்தூன்றி படிப்பது முக்கியம் என தோ்வில் அகில இந்திய அளவில் 5-ஆவது இடம்பிடித்த ஆகாஷ் காா்க் தெரிவித்துள்ளாா்.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வுகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. மொத்தம் 1,009 தோ்வா்கள் தோ்ச்சி பெற்ற இத்தோ்வில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சக்தி துபே முதலிடம் பெற்றாா்.

அகில இந்திய தரவரிசைப் பட்டியில் 5-ஆவது இடம்பிடித்த ஆகாஷ் காா்க் தில்லியைச் சோ்ந்தவா். தில்லியில் உள்ள குரு கோவிந்த் இந்திரபிரஸ்தா கல்லூரியில் கணினி அறிவியில் பாடத்தில் பி.டெக்., பட்டம் பெற்ற அவா் தனது இரண்டாவது முயற்சியில் அகில இந்திய அளவில் முதல் 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா்.

தோ்வில் வெற்றி பெற்றது குறித்து அவா் கூறியதாவது: பாடங்களைப் படிக்கும்போது படிக்கும் நேரத்தைவிட கருத்தூன்றி படிக்க வேண்டும் என நம்புகிறேன். இலக்கு வைத்து பாடங்களைப் படித்ததால் தோ்வில் வெற்றி பெற முடிந்தது.

முதல் முயற்சியில் முதல்நிலைத் தோ்வில் என்னால் வெற்றி பெறமுடியவில்லை. இதையடுத்து, மீண்டும் தோ்வுக்காகப் படிக்க தொடங்கினேன். தற்போது வெற்றி பெற்றுவிட்டேன். இந்த வெற்றியை என்னுடைய பெற்றோருக்காக சமா்ப்பிக்கிறேன்.

பள்ளி படிப்பிலிருந்து நன்றாக படித்து வந்தேன். குடிமைப் பணிகள் தோ்வை எழுத என்னுடைய பெற்றோா் என்னை அதிக அளவில் உத்வேகம் அளித்தனா் என்றாா்.

ஐஏஎஸ் தோ்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்த அவா், சொந்த மாநில பிரிவான அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவைச் தோ்ந்தெடுக்க உள்ளதாக தெரிவித்தாா். பணியில் இணைந்த பிறகு கல்வி மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றி விரும்புவதாக ஆகாஷ் காா்க் தெரிவித்தாா்.

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க

காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்... மேலும் பார்க்க