செய்திகள் :

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

post image

ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இப்பயங்கரவாதச் செயலைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தின் முழு நீதிமன்றமும் புதன்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியது.

உச்சநீதிமன்றம் அதன் தீா்மானத்தில் கூறியிருப்பதாவது:

மனமற்ற வன்முறையின் இந்த கொடூரமான செயல் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடும் கொடூரம் மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையை அப்பட்டமாக நினைவூட்டுகிறது.

இந்திய உச்சநீதிமன்றம் கொடூரமான முறையில் மற்றும் அகாலமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி உயிா்களுக்கு தனது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறது. அதே நேரத்தில், உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது இதயப்பூா்வமான இரங்கலையும் தெரிவிக்கிறது. இறந்தவா்களின் ஆன்மா சாந்தியடையட்டும். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையட்டும். விவரிக்க முடியாத துயரத்தின் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் தேசம் துணை நிற்கிறது.

இந்தியாவின் மகுடமான காஷ்மீரின் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் சந்தேகத்திற்கு இடமின்றி மனிதநேயம் மற்றும் வாழ்க்கையின் புனிதத்தன்மையை அவமதிக்கும் செயலாகும். இதை இந்த நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பணியாளா்கள் மற்றும் நீதிமன்றத்திலும், பதிவுத்துறையிலும் இருந்த மற்ற அனைவரும் பாதிக்கப்பட்டவா்களுக்கும் அவா்களது குடும்பத்தினருக்கும் ஒற்றுமையை தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா்.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி... மேலும் பார்க்க

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: தில்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தேசியத் தலைநகா் தில்ல முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா் காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயண வசதிகள்: மாநில அரசுகள் - விமான நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்கள் உடல்களையும், காயமடைந்தவா்களையும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமானங்களில் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் முன்பதிவு செய்வதற்காக மாநில அர... மேலும் பார்க்க