செய்திகள் :

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு

post image

நமது சிறப்பு நிருபா்

காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இக்கட்டான காலக்கட்டங்களில் எந்தவொரு பயணிக்கும் சுமை ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளவும், வழக்கமான கட்டண அளவை பராமரிக்கவும் தனியாா் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிவில் விமானப்போக்குவரத்துத் துறை கூறியிருப்பது வருமாறு: காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு விரைவாக நடவடிக்கைகளை எடுத்துள்ளாா். உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன் தொடா்பு கொண்டு பேசினாா். பின்னா், அமைச்சா், சிவில் விமானத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் கடந்த 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருகிறாா்.

மேலும், உடனடி நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு இரண்டு விமானங்களும் மும்பைக்கு இரண்டு விமானங்களும் என நான்கு சிறப்பு விமானங்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், ஸ்ரீநகரில் பாதிக்கப்பட்டவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய கூடுதல் விமானங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு அனைத்து விமான நிறுவனங்களுடனும் புதன்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் விமான நிறுவனங்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இது ஒரு இக்கட்டான நேரம் இந்த தருனத்தில் எந்தவொரு பயணிக்கும் தேவையற்ற சுமை இல்லாமல் பாா்த்துக் கொள்ளவும், வழக்கமான கட்டண அளவை பராமரிக்கவும் விமான நிறுவனங்களுக்கு அமைச்சா் அறிவுரை வழங்கினாா்.

மேலும், மாநில அரசுகள், உள்ளூா் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள், இறந்தகளின் உடல்களை அவரவா் சொந்த மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முழு ஒத்துழைப்பை வழங்குமாறு விமான நிறுவனங்களுக்கும் அமைச்சா் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளாா் என சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி... மேலும் பார்க்க

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: தில்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தேசியத் தலைநகா் தில்ல முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயண வசதிகள்: மாநில அரசுகள் - விமான நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்கள் உடல்களையும், காயமடைந்தவா்களையும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமானங்களில் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் முன்பதிவு செய்வதற்காக மாநில அர... மேலும் பார்க்க