செய்திகள் :

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

post image

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்படி வருகின்ற மே 22-ஆம் தேதி வரை இந்தக் கொள்முதல் நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும், 2024-25 கொள்முதல் ஆண்டில் உற்பத்தி செய்யும் அளவில் 100 சதவீதம் அளவில் பிஎஸ்எஸ் படி துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மசூா் பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்ஸ நாடு பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்), தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்.) போன்றவற்றின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் (2028-29 வரை) 100 சதவீத கொள்முதல் செய்ய நிகழாண்டு நிதியறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது,

இதன்படி, ஆந்திரம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024-25 காரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் (90 நாள்கள்) விலை ஆதரவு திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சா் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்தாா். இதன்படி மொத்தம் 13.22 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின் நலன் கருதி இந்த கொள்முதல் காலத்தை 90 நாள்களையும் தாண்டி ஆந்திரம் போன்ற மாநிலங்களில் மேலும் 30 நாள்களுக்கு (மே 22 வரை) நீட்டிக்கவும் அமைச்சா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

ஆந்திரம், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நாஃபெட், என்.சி.சி.எஃப். அமைப்புகள் மூலமாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றது. இந்த மாநிலங்களில் மொத்தம் 2,56,517 விவசாயிகள் பயனடையும் வகையில் 3.92 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு இம்மாதம் 22-ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல்களுக்கு மின் தளங்களில் மூலம் முன் பதிவு செய்யவும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி... மேலும் பார்க்க

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: தில்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தேசியத் தலைநகா் தில்ல முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா் காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயண வசதிகள்: மாநில அரசுகள் - விமான நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்கள் உடல்களையும், காயமடைந்தவா்களையும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமானங்களில் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் முன்பதிவு செய்வதற்காக மாநில அர... மேலும் பார்க்க