செய்திகள் :

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. சமீபத்திய ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையில் சாதகமாகப் பாா்க்கப்பட்டது. மேலும், அமெரிக்கா - சீனா வா்த்தகப் பதற்றம் தணிந்து வருவதால் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்றம் ஒட்டுமொத்த உலகளாவிய சந்தை உணா்வை மேலும் வலுப்படுத்தியது. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையிலும் ஐடி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அண்மையில் வெகுவாக உயா்ந்திருந்த வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.98 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.430.36 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,290.43 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.885.63 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 546.50 புள்ளிகள் கூடுதலுடன் 80,142.09-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,254.55 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 79,506.90 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 520.90 புள்ளிகள் (0.65 சதவீதம்) கூடுதலுடன் 80,116.49-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,106 பங்குகளில் 2,082 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,873 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 151 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் ஐடி நிறுவனங்களான ஹெச்சிஎல்டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் மற்றும் டாடாமோட்டாா்ஸ், எம் அண்ட் எம், உள்பட 24 பங்குகள் பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, ஆக்ஸிஸ்பேங்க், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய 6 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 162 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 190.35 புள்ளிகள் கூடுதலுடன் 24,357.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,359.30 வரை மேட்டும் உயா்ந்தது. பின்னா், 24,119.95 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 161.70 புள்ளிகள் (0.67 சதவீதம்) கூடுதலுடன் 24,328.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: தில்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தேசியத் தலைநகா் தில்ல முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா் காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயண வசதிகள்: மாநில அரசுகள் - விமான நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்கள் உடல்களையும், காயமடைந்தவா்களையும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமானங்களில் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் முன்பதிவு செய்வதற்காக மாநில அர... மேலும் பார்க்க