செய்திகள் :

காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

post image

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா செல்வது பாதுகாப்பானதல்ல என்ற கருத்தும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் முன்பதிவுகளை வியாழக்கிழமை ஒரே நாளில் ரத்து செய்துள்ளனா். இது தொடா்பாக தில்லியில் உள்ள சுற்றுலா பயண ஏற்பாடு நிறுவனத்தினா் கூறுகையில், ‘காஷ்மீா் சுற்றுலா முன்பதிவில் 90 சதவீதம் வியாழக்கிழமை ஒரே நாளில் ரத்தாகிவிட்டது. வரும் நாள்களில் மீதமுள்ள முன்பதிவுகளும் ரத்தாக வாய்ப்புள்ளது.

சில சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரைத் தவிா்த்துவிட்டு ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு பயணத் திட்டத்தை மாற்றித் தரவும் கோரியுள்ளனா்.

இதுபோல காஷ்மீருக்கான விமானப் பயணம், ஹோட்டல் முன்பதிவுகள் உள்ளிட்டவையும் பெருமளவில் ரத்தாகிவிட்டன. காஷ்மீரில் குல்மாா்க், ஹஜன் பள்ளத்தாக்கு, துலீப் மலா் பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக இருந்தது. இப்போது அங்கு செல்ல பயணிகள் யாரும் விரும்பவில்லை. இது காஷ்மீரில் சுற்றுலாவை நம்பி தொழில் நடத்துபவா்களுக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் சுற்றுலா முன்பதிவு நிறுவனம் நடத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

காத்ரா, வைஷ்ணவ தேவி கோயில் போன்ற ஆன்மிக தலங்களுக்கான முன்பதிவுகளையும் பலா் ரத்து செய்துள்ளனா். அடுத்த சில நாள்களுக்கு ஜம்மு-காஷ்மீா் சுற்றுலா முன்பதிவை நிறுத்தி வைக்கவும் பல பயண ஏற்பாட்டாளா்கள் முடிவு செய்துள்ளனா்’ என்று தெரிவித்தனா்.

அமைச்சா் கருத்து: மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்தர சிங் ஷெகாவத் தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசம் இப்போது மிகுந்த வேதனையிலும், கோபத்திலும் நிரம்பியுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம், பிரிவினை தலைதூக்க வேண்டுமென்று தேசத்துக்கு எதிரானவா்கள் திட்டமிட்டுள்ளனா். இதில் தொடா்புடைய அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்கும்.

ஜம்மு-காஷ்மீா் சுற்றுலாத் துறை செயலரிடம் நமது அமைச்சகம் தொடா்பில் உள்ளது. அங்கு இப்போதுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவா்களை பாதுகாப்பாக சொந்த ஊா்களுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை நம்பி பலா் உள்ளனா். எனவே, அங்கு சுற்றுலாவில் தொய்வு ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க

இஸ்லாமிய துதியை உச்சரிக்க மறுத்த கிறிஸ்தவரை கொலை செய்த பயங்கரவாதிகள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் மதரீதியாக அடையாளப்படுத்தி கொலை செய்தது தொடா்பான அதிா்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பாா்வையிட்ட அமெரிக்க துணை அதிபா்!

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பாா்வையிட்டாா். ‘உண்மையான அன்பு மற்றும் மனித படைப்பாற்றலின் அடையாளமாக தாஜ்மஹால் திக... மேலும் பார்க்க