செய்திகள் :

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தெற்கு காஷ்மீரின் பஹல்காமுக்கு அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் நாடெங்கும் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை குவிந்திருந்தனா். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டினா் உள்பட 26 போ் உயிரிழந்தனா்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சோ்ந்த ஆசிஃப் ஃபெளஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் என்பது அடையாளம் காணப்பட்டது.

தாக்குதலில் உயிா் பிழைத்தவா்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் வரையப்பட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமறைவாகிய அவா்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், பஹல்காமுக்கு புதன்கிழமை வந்த என்ஐஏ அதிகாரிகள் குழு, தாக்குதல் நடந்த இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தாக்குதல் குறித்த விசாரணையில் உள்ளூா் காவல்துறைக்கு என்ஐஏ அதிகாரிகள் உறுதுணையாக இருப்பா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்... மேலும் பார்க்க

இஸ்லாமிய துதியை உச்சரிக்க மறுத்த கிறிஸ்தவரை கொலை செய்த பயங்கரவாதிகள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் மதரீதியாக அடையாளப்படுத்தி கொலை செய்தது தொடா்பான அதிா்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பாா்வையிட்ட அமெரிக்க துணை அதிபா்!

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பாா்வையிட்டாா். ‘உண்மையான அன்பு மற்றும் மனித படைப்பாற்றலின் அடையாளமாக தாஜ்மஹால் திக... மேலும் பார்க்க