செய்திகள் :

2057-க்குள் கரியமில சமநிலை: பரோடா வங்கி இலக்கு

post image

தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பூமி தினத்தை முன்னிட்டு, தனது ‘சுற்றுச்சூழல், சமூக, நிா்வாக’ (இஎஸ்ஜி) கொள்கையை பரோடா வங்கி வெளியிட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் (படம்), வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ், ‘நமது சக்தி, நமது பூமி’ என்ற கருப்பொருளுடன் புதுபிக்கத்தக்க எரிபொருளுக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற பல்வேறு செயல்திட்டங்களை வங்கி வகுத்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் வாகன மற்றும் வீட்டுவசதி கடன் வாடிக்கையாளா்களின் சாா்பாக இதுவரை வங்கி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருக்கும் கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.

இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய பரோடா வங்கி தற்போது முடிவு செய்துள்ளது.

ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிெல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 7.7% உயர்வு!

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி-யில் 7.68% உயர்ந்து ரூ.1,593.60 ஆக முடிந்தது.மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.1 சதவிகிதம் அதிகர... மேலும் பார்க்க

ஐடி, ஆட்டோ பேரணியால் 4 மாதங்களுக்குப் பிறகு 80,000 புள்ளிகள் கடந்து சென்செக்ஸ் பயணம்!

இன்றைய நிலையற்ற அமர்வில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து ஏழாவது அமர்வாக உயர்ந்து முடிந்தது. தகவல் தொழில்நுட்பம், பார்மா மற்றும் ஆட்டோ ஆகிய பங்குகளின் தலைமையில் இந்தப் பயணம் நீடித்தது.காலை ந... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44-ஆக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44 ஆக முடிந்தது.வ... மேலும் பார்க்க

கூகுள் பிக்சல் 9ஏ அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

கூகுள் பிக்சல் வரிசையின் 9ஏ மாடலை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கூகுள் நிறுவனம் பிக்சல் வகை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான பிக்சல் 9 மாடலின் அடுத்... மேலும் பார்க்க

புதிய அப்பாச்சியை அறிமுகம் செய்த டிவிஎஸ்!

இரு சக்கர வாகனத்தில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறி... மேலும் பார்க்க