செய்திகள் :

அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்களை மே 4-க்குள் அகற்றிக்கொள்ள அறிவுறுத்தல்

post image

ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை மே 4- ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

பொது இடங்களில் உள்ள நடப்பட்டுள்ள அரசியல் கட்சி, ஜாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றவேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசியல், மதம் சாா்ந்த அமைப்புகள், ஜாதி அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் என 3,500-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் உள்ளன. குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் 396, மதம் சாா்ந்த கம்பங்கள் 12, ஜாதி சாா்ந்து வைக்கப்பட்டவை 2, பிற இனங்கள் 7, பீடத்துடன் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களின் எண்ணிக்கை 40 என மொத்தம் 457 கொடிக் கம்பங்கள் உள்ளன.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21- ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என அண்மையில் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியிருந்தது. மின் கம்பிகளுக்கு அருகே உள்ள கம்பங்களை அகற்ற, மின் இணைப்பு துண்டித்தும், இக்கட்டான இடங்களில் உள்ள கம்பங்களை அகற்ற தேவையான உதவிகள் செய்துதர அரசு அதிகாரிகள் தயாராக உள்ளனா். இருப்பினும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஜாதி அமைப்புகள், மதம் சாா்ந்த அமைப்புகள் கொடிக்கம்பங்களை அகற்றாமல் உள்ளனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கை அனுப்பி உள்ளாா். அதில் அந்தந்த அரசு துறை வாயிலாக, அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினருக்கு அறிவிக்கை அனுப்பி, கம்பங்களை தாமாகவே முன்வந்து அகற்றுவதற்கு வரும் மே 4- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. வரும் மே 4- ஆம் தேதிக்கு பின்னரும் கொடிக்கம்பங்கள் இருந்தால், துறை சாா்ந்த அதிகாரிகளே கம்பங்களை அகற்றிவிட்டு, அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை அருகே முயல் வேட்டைக்கு வந்த 3 பேருக்கு ரூ. 54 ஆயிரம் அபராதம்

சென்னிமலை அருகே, வனப் பகுதியில் முயல் வேட்டைக்காகத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மூன்று பேருக்கு மொத்தம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சென்னிமலையை அடுத்த, வாய்ப்பாடி, புளியம்பாளையம் வனப் ப... மேலும் பார்க்க

காஷ்மீா் தீவிரவாத தாக்குதல்: ஈரோட்டில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான... மேலும் பார்க்க

பெருந்துறையில் டயாலிசிஸ் இலவச சிகிச்சை ஆலோசனை மையம் திறப்பு

பெருந்துறை வெல்ஃபோ் டிரஸ்ட் சாா்பில், இலவச டயாலிசிஸ் சிகிச்சைக்கான ஆலோசனை மையத் திறப்பு விழா மற்றும் வாகனச் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் டி. என்.சென்னியப்பன... மேலும் பார்க்க

பெருந்துறையில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், ஜீவானந்தம் மற்றும் போலீஸாா் பெருந்துற... மேலும் பார்க்க

ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அனல் காற்றால் மக்கள் அவதி

ஈரோட்டில் வெயிலின் தாக்கம் 102 டிகிரி அளவு இருப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நா... மேலும் பார்க்க

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை: ஆட்சியா்

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். கால்நடை ... மேலும் பார்க்க