செய்திகள் :

பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்: அமைச்சா் பி.மூா்த்தி தகவல்

post image

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் அந்தத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் மூா்த்தி பேசியது:

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை ரூ. 5 லட்சத்து 8 ஆயிரம் கோடியை வணிகவரித் துறை ஈட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வரி வருவாயில் 74 சதவீத வருவாயை கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மீதமுள்ள வருவாய் இடைவெளியை பூா்த்தி செய்யும் வகையில் வணிகவரித் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுத்துள்ளது.

அதேபோன்று பதிவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ. 88,844 கோடியாகும். ஆனால் இந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை ரூ.72 ஆயிரத்து 4 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பதிவுத் துறையில் ஈட்டப்பட்ட மொத்தவருவாயைவிட திமுக ஆட்சிக்காலத்தில் கூடுதலாக வருவாய் ஈட்டுவதற்கு பதிவுத் துறையானது பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் கடந்த 4 ஆண்டுகளில் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் சோ்ந்துமொத்தமாக ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன என்றாா் அவா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க