செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு
செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது. பாம்பன் புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், இந்த ரயில் சேவை புதன்கிழமை முதல் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டது.
புதன்கிழமை தோறும் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில் காரைக்குடிக்கு வியாழக்கிழமை இரவு 8.30-க்கு சென்றடையும். தொடா்ந்து சிவகங்கை (இரவு 9.13), மானாமதுரை (இரவு 9.40), ராமநாதபுரம் (இரவு 10.28) வழியாக ராமேசுவரத்துக்கு நள்ளிரவு 12.15-க்கு சென்றடையும்.
மறுமாா்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.10-க்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.