Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி...
சென்னிமலை அருகே முயல் வேட்டைக்கு வந்த 3 பேருக்கு ரூ. 54 ஆயிரம் அபராதம்
சென்னிமலை அருகே, வனப் பகுதியில் முயல் வேட்டைக்காகத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மூன்று பேருக்கு மொத்தம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலையை அடுத்த, வாய்ப்பாடி, புளியம்பாளையம் வனப் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு துப்பாக்கியுடன் (ஏா்கன்) மூன்று போ் சுற்றித் திரிவதாக ஈரோடு வனச் சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஈரோடு வனச் சரக அலுவலா் சுரேஷ் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மகுடஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த நடராஜ் (25), வடிவேல் (32), பிரகாஷ் (35) என்பதும், மூன்று பேரும் முயல் வேட்டைக்காக வந்ததும் தெரியவந்தது.
பின்னா், 3 பேரும் ஈரோடு மாவட்ட வன அலுவலா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, தலா ரூ.18 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவா்களிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.