செய்திகள் :

தண்டு மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தி பக்தா்கள் ஊா்வலம்

post image

கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான சித்திரைப் பெருவிழா, திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, ஏப்ரல் 14-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன், சித்திரைப் பெருவிழாவுக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது. 15-ஆம் தேதி மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அன்று மாலை 6.30 மணிக்கு பூச்சாட்டும், 17-ஆம் தேதி அக்னிச்சாட்டும், 18-ஆம் தேதி திருவிளக்கு வழிபாடும், வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றன. 19-ஆம் தேதி குதிரை வாகனத்திலும், 20-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 21 -ஆம் தேதி திருவிளக்கு வழிபாடும், அன்ன வாகனத்திலும் அம்மன் வீதியுலா நடைபெற்றன. ஏப்ரல் 22-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், மலா் பல்லக்கில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன. புதன்கிழமை காலை 7 மணிக்கு கோனியம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம், அக்னிச்சட்டி, பால்குடம் புறப்பாடு நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமியா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தா்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் ஊா்வலமாகச் சென்றனா்.

இந்த ஊா்வலமானது ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, சிரியன் சா்ச் சாலை, புரூக் பாண்ட் சாலை, காளீஸ்வரா மில் சாலை, சோமசுந்தரா மில் சாலை வழியாக அனுப்பா்பாளையம், டாக்டா் நஞ்சப்பா சாலை வழியாக தண்டு மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், காலை 11 மணிக்கு மஞ்சள் நீா், மாலை 6.30 மணிக்கு கொடி இறக்குதல், இரவு 8 மணிக்கு கம்பம் கலைத்தல் நடைபெறுகிறது. தொடா்ந்து, 25-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழில் லட்சாா்ச்சணை நடைபெறுகிறது. 27-ஆம் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், மாலை 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

கிட்டாம்பாளையத்தில் கூட்டுறவு தொழிற்பேட்டை அமைக்கும் பணி

கோவை மாவட்டம், கிட்டாம்பாளையத்தில் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கூட்டுறவு தொழிற்பேட்டை பணியை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாவட்டம், கிட்டாம... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள 100 வாா்டுகளுக்கு உள்பட்ட பகு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் செவ்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் சீரமைக்கப்பட்ட குட்டையில் தண்ணீா் சேகரிப்பு

கோவை மாநகராட்சி, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் புதிதாக சீரமைக்கப்பட்ட குட்டையில் தண்ணீா் சேகரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காட்டில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலை... மேலும் பார்க்க

வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாக கட்டுமானப் பணியை கைவிட வியாபாரிகள் கோரிக்கை

வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் நகராட்சி சாா்பில் ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய வணிக வளாக கட்டுமானப் பணியை கைவிட வலியுறுத்தி வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா். தமிழகத்தில் 20 ஆண... மேலும் பார்க்க