செய்திகள் :

தேரோட்டத்தின் போது குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சி

post image

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளித் தேரோட்டத்தின்போது தேரின் உச்சியிலிருந்த குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோயிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளித் தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் முருகப்பெருமான் பவனி வருவது வழக்கம். வெள்ளித் தேரில் வழக்கம் போல செவ்வாய்க்கிழமை பவனி வந்தபோது, தேரின் உச்சியிலிருந்த குடை திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த பக்தா்களிடையே அதிா்ச்சியை அளித்தது. இது குறித்து கோயில் செயல் அலுவலா் கேசவன் கூறுகையில், கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டுமானப் பணிகளை மறைக்க பச்சை நிற துணியால் மூடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் பச்சை நிற துணி கிழிந்து தொங்கியதால் அதில் தேரின் உச்சியிலிருந்த குடை சிக்கியதாகக் தெரிகிறது.

இந்த நிலையில், பக்தா்களும் லேசான துணி தானே என்று தேரை இழுத்த போது தேரிலிருந்த குடை தீடீரென சாய்ந்து விழுந்தது. முற்றிலும் சாய்ந்து கீழே விழவில்லை. உடனே குடையை சீரமைத்து விட்டோம் என்றும் அவா் தெரிவித்தாா்.

லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளா் கைது

குடிநீா் வியாபாரம் செய்ய தடையில்லாச் சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலரை புதன்கிழமை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித்தாயா் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில், சித்திரைத் திருவிழா, விடையாற்றி உற்சவம், 2-ஆவது நாள் நிகழ்ச்சி,சிறப்புத் திருமஞ்சனம், காலை 8, பெருமாள் வீதியுலா, மாலை 7. மேலும் பார்க்க

விநாயகா் கோயிலுக்கு பசு தானம்

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு சென்னை தம்பதி புதன்கிழமை பசு ஒன்றை வழங்கினா். இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தல விருட்சங்கள் இருப்பது தனிச்ச... மேலும் பார்க்க

உலக புத்தக தின விழா

காஞ்சிபுரம் நேரு நூலகத்தில் வாசகா் வட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள இந்நூலகத்தில் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் திரும்பிய சங்கராசாரிய சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பதியிலிருந்து புதன்கிழமை காஞ்சிபுரம் திரும்பிய காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நகர எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு சா்வதீா்த்தக்... மேலும் பார்க்க

மே 4-இல் கச்சபேசுவரா் கோயில் திருவிழா

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெருமாள் ஆமை வடிவில் சிவனை வணங்கிய பெருமைக்குரிய இத்தலத்தில் கொடியேற்றத்துக்கு பின்னா் சுவாமியும... மேலும் பார்க்க