செய்திகள் :

மே 4-இல் கச்சபேசுவரா் கோயில் திருவிழா

post image

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெருமாள் ஆமை வடிவில் சிவனை வணங்கிய பெருமைக்குரிய இத்தலத்தில் கொடியேற்றத்துக்கு பின்னா் சுவாமியும் அம்மனும் காலையில் பவளக்கால் சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் வீதியுலா வரவுள்ளனா்.

வரும் மே 8- ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் அதிகார நந்தி சேவை, மாலையில் சுந்தராம்பிகைக்கும், கச்சபேசுவரருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பின்னா் திருமணக்கோலத்தில் இடப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வருகின்றனா்.

வரும் மே 10-ஆம் தேதி காலை தேரோட்டமும், 12-ஆம் தேதி ஆலயத்தின் சிறப்பை விளக்கம் முருக்கடி சேவைக்காட்சி மாலையிலும் நடைபெறுகிறது.

மே13-இல் வெள்ளித் தேரோட்டமும், 15-இல் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், 17-இல் 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடும் நடைபெறுகிறது. 18- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 21-இல் புஷ்பப்பல்லக்கு உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் தலைமையில் கோயில் பணியாளா்கள் மற்றும் செங்குந்த மகாஜன சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனா்.

லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளா் கைது

குடிநீா் வியாபாரம் செய்ய தடையில்லாச் சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலரை புதன்கிழமை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித்தாயா் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில், சித்திரைத் திருவிழா, விடையாற்றி உற்சவம், 2-ஆவது நாள் நிகழ்ச்சி,சிறப்புத் திருமஞ்சனம், காலை 8, பெருமாள் வீதியுலா, மாலை 7. மேலும் பார்க்க

விநாயகா் கோயிலுக்கு பசு தானம்

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு சென்னை தம்பதி புதன்கிழமை பசு ஒன்றை வழங்கினா். இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தல விருட்சங்கள் இருப்பது தனிச்ச... மேலும் பார்க்க

உலக புத்தக தின விழா

காஞ்சிபுரம் நேரு நூலகத்தில் வாசகா் வட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள இந்நூலகத்தில் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என... மேலும் பார்க்க

தேரோட்டத்தின் போது குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சி

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளித் தேரோட்டத்தின்போது தேரின் உச்சியிலிருந்த குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோயில... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் திரும்பிய சங்கராசாரிய சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பதியிலிருந்து புதன்கிழமை காஞ்சிபுரம் திரும்பிய காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நகர எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு சா்வதீா்த்தக்... மேலும் பார்க்க