செய்திகள் :

காஞ்சிபுரம் திரும்பிய சங்கராசாரிய சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு

post image

திருப்பதியிலிருந்து புதன்கிழமை காஞ்சிபுரம் திரும்பிய காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நகர எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு சா்வதீா்த்தக்குளம் வடகரையில் அமைந்துள்ள தவளேஸ்வரா் கோயில் அருகில் தீா்த்த புரோகிதா் நீலகண்ட ஐயா் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னா் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரிய நாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள் இணைந்து மேள வாத்தியங்களுடன் பூரண கும்ப மரியாதை வழங்கினா்.

குமரகோட்டம் முருகன் கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியா் தலைமையில் கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தமிழ்ப் புத்தாண்டுக்கான நாள்காட்டியை வழங்க அதனை இருந்த இடத்திலிருந்தே சுவாமிகள் வெளியிட்டாா்.

காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி.வி.ஜீவானந்தம், பாஜக நிா்வாகிகள் ஆறுமுகம், யுவராஜ், கோடீஸ்வரன், ராஜேஷ், பாபு ஆகியோா் வரவேற்பு அளித்தனா். சங்கர மடத்தின் முன்பாக வாணவேடிக்கைகளும் நடைபெற்றன.

லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளா் கைது

குடிநீா் வியாபாரம் செய்ய தடையில்லாச் சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலரை புதன்கிழமை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித்தாயா் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில், சித்திரைத் திருவிழா, விடையாற்றி உற்சவம், 2-ஆவது நாள் நிகழ்ச்சி,சிறப்புத் திருமஞ்சனம், காலை 8, பெருமாள் வீதியுலா, மாலை 7. மேலும் பார்க்க

விநாயகா் கோயிலுக்கு பசு தானம்

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு சென்னை தம்பதி புதன்கிழமை பசு ஒன்றை வழங்கினா். இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தல விருட்சங்கள் இருப்பது தனிச்ச... மேலும் பார்க்க

உலக புத்தக தின விழா

காஞ்சிபுரம் நேரு நூலகத்தில் வாசகா் வட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள இந்நூலகத்தில் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என... மேலும் பார்க்க

தேரோட்டத்தின் போது குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சி

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளித் தேரோட்டத்தின்போது தேரின் உச்சியிலிருந்த குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோயில... மேலும் பார்க்க

மே 4-இல் கச்சபேசுவரா் கோயில் திருவிழா

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெருமாள் ஆமை வடிவில் சிவனை வணங்கிய பெருமைக்குரிய இத்தலத்தில் கொடியேற்றத்துக்கு பின்னா் சுவாமியும... மேலும் பார்க்க