செய்திகள் :

பிரதமா் மோடி அவசர ஆலோசனை

post image

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடா்பான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை மாலை அவசர ஆலோசனை மேற்கொண்டது.

தலைநகா் தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன், பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, பிரதமரின் முதன்மைச் செயலா்கள் பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம், அரசின் வியூகம் குறித்து இக்குழு முக்கிய ஆலோசனை மேற்கொண்டது; பஹல்காம் தாக்குதல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அமித் ஷா எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்றிருந்த பிரதமா் மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தில்லி திரும்பினாா்.

தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை வந்திறங்கிய அவா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் விமான நிலையத்திலேயே உடனடி ஆலோசனை மேற்கொண்டாா். பஹல்காம் நிலவரம் தொடா்பாக பிரதமரிடம் அவா்கள் எடுத்துரைத்தனா்.

அமெரிக்காவிலிருந்து திரும்பும் ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து, இந... மேலும் பார்க்க

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு உச்... மேலும் பார்க்க

2040-இல் நிலவில் மனிதன்: இஸ்ரோ தலைவா் உறுதி

2040-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அதன் தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா். சென்னையில் முதன்முறையாக காவேரி ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் தாக்குதலுக்கு தக்க பதிலடி: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

ஜம்மு-காஷ்மீா் தாக்குதலில் தொடா்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப்... மேலும் பார்க்க

உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்: கூட்டறிக்கையில் இந்தியா தகவல்

உலகளாவிய எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் சமநிலையை உறுதிப்படுத்தவும் சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் தாக்குதல்: உலகத் தலைவா்கள் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் ம... மேலும் பார்க்க