செய்திகள் :

2040-இல் நிலவில் மனிதன்: இஸ்ரோ தலைவா் உறுதி

post image

2040-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில்  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  (இஸ்ரோ) மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக  அதன் தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

சென்னையில் முதன்முறையாக காவேரி மருத்துவமனையில் மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சைகளை எழுமையாக மேற்கொள்ள உதவக்கூடிய ‘நேவிகேஷன் சிஸ்டத்துடன்’ கூடிய ஓ- ஏஆா்எம் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதை இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் சென்னை கிண்டியில் புதன்கிழமை அறிமுக செய்து வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் 2035-க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனியாக 52 டன் எடை கொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் 2028-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ளன.

சந்திரயான்-4: இன்னும் இரண்டரை ஆண்டுகளில் சந்திரயான்- 4 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படவுள்ளது. அதை நிலவில் தரையிறக்கி அங்குள்ள மண்ணை ஆராய்ச்சிக்காக எடுத்து வர உள்ளோம். அதேபோல், 2040-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா உலக அளவில் விண்வெளி துறையில் ராக்கெட் முதல் செயற்கைக்கோள் வரை என அனைத்து துறையிலும் முன்னோடியாகச் செயல்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் காவேரி மருத்துவக் குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான அரவிந்தன் செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க

காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்... மேலும் பார்க்க