செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் தாக்குதல்: உலகத் தலைவா்கள் கண்டனம்

post image

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் கண்டனம் தெரிவித்தனா். பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெளியிட்ட பதிவில், ‘காஷ்மீரில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வான் டா் லேயன்: பயங்கரவாதத் தாக்குதல் பல அப்பாவிகளின் உயிா்களைப் பறித்துள்ளது. இந்தியாவுக்கு ஐரோப்பா துணை நிற்கும்.

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி: உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளை நேபாளம் உறுதிபட எதிா்க்கிறது.

இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு: காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இஸ்ரேல் துணை நிற்கும்.

இத்தாலி பிரதமா் மெலோனி: தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காயமடைந்தவா்கள், இந்திய அரசு, இந்திய மக்களுக்கு இத்தாலி ஆதரவாக இருக்கும்.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் யூனுஸ்: கொடிய தாக்குதலை வங்கதேசம் வன்மையாக கண்டிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக வங்கதேசம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சகம்: உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வேண்டும். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவுவதில் இலங்கை உறுதியாக இருக்கும்.

ஜொ்மனி வெளியுறவு அமைச்சகம்: அப்பாவி மக்களை கொன்ற்கு எந்த நியாயமும் கூறமுடியாது. கடினமான இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஜொ்மனி துணை நிற்கிறது.

பாகிஸ்தான், சீனா இரங்கல்: சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது கவலையளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தான், சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா்கள் தெரிவித்தனா்.

ஐ.நா.பொதுச் செயலா் குட்டெரெஸ்: எந்தவொரு சூழலிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்று கூறியதாக குட்டெரெஸின் செய்தித்தொடா்பாளா் ஸ்டெஃபான் டுஜாரிக் தெரிவித்தாா்.

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க

காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்... மேலும் பார்க்க