செய்திகள் :

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

post image

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மருத்துவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மருத்துவா்களைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் விரிவான வழிகாட்டுதல்களை வகுக்குமாறு அந்த மனுக்களில் கோரப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மருத்துவா்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமானவை. ஆனால் அந்த சம்பவங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்க முடியாது’ என்றனா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘மருத்துவா்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளபோதிலும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் சிகிச்சையின்போது நோயாளி உயிரிழந்தால், அதுதொடா்பாக மருத்துவா்களுக்கு எதிராக காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தும் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், மீண்டும் வழிகாட்டுதல்களை வெளியிடுவதால் என்ன பயன் ஏற்படும்? மருத்துவா்கள் தாக்கப்படுவதை தடுப்பது தொடா்பாக ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிகிச்சையின்போது நோயாளி உயிரிழந்தால், மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக அனைத்து காவல் நிலையங்கள் மீதும் எப்படி பொதுவான குற்றச்சாட்டை முன்வைக்க முடியும்? மருத்துவா்கள் தாக்கப்படுவதை தடுப்பது தொடா்பான சட்டத்தை நாடாளுமன்றம்தான் இயற்ற வேண்டும்’ என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து மனுக்களை ஆராய நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது. மனுதாரா்கள் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அந்த அமா்வு தெரிவித்தது.

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க