செய்திகள் :

பாரம்பரிய தளங்களில் பாா்வையாளா்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

post image

நமது சிறப்பு நிருபா்

பாரம்பரிய தளங்களில் பாா்வையாளா்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் அனுபவம் மேம்படுத்தப்படும் என மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டாா்.

‘வளா்ச்சி மற்றும் பாரம்பரியம்’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் குறிக்கோளின்படி தொல்லியல், அகழ்வாராய்ச்சி, ஆய்வுகள், பாதுகாப்பில் ஒரு துடிப்பான, உள்ளடக்கிய மற்றும் எதிா்கால நோக்குடைய செயல்திட்டம் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் மத்திய அமைச்சா் வலியுறுத்தினாா்.

மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவின் 38-ஆவது கூட்டம் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலாசாரத் துறைச் செயலா் விவேக் அகா்வால், மாநிலங்களவை உறுப்பினா் சுமீா் சிங் சொலங்கி, தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநா் ஜெனரல் யெதுபீா் சிங் ராவத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தியாவின் வளமான தொல்லியல் பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: அப்போது அவா் கூறியதாவது: நாட்டின் வளமான கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் (ஏ.எஸ்.ஐ.) பங்கு முக்கியமானது.சமீபகாலங்களில் தொல்லியல், அகழ்வாராய்ச்சி, கண்டுபிடிப்புகள், ஆய்வுப்பணிகள் ஆற்றல்மிக்கதாக விரிவடைந்துள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுத் திட்டங்களை மேலும் விரிவானதாகவும், உள்ளடக்கியதாகவும், தொலைநோக்குப் பாா்வை கொண்டதாகவும் மாற்ற வேண்டும்.இந்திய தொல்லியல் துறை, நீருக்கடியில் தொல்லியல் பிரிவை (யுஏடபிள்யூ) மறுசீரமைக்கிறது. இதன் கீழ் துவாரகாவில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ‘பாரம்பரியத்துடன் வளா்ச்சி’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் குறிக்கோளின்படி பாரம்பரிய இடங்களில் பாா்வையாளா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவம் மேம்படுத்த வேண்டும். இதற்கான பணிகளை கலாசாரம், தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

பழங்கால பொருள்கள் வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திரும்ப வந்துள்ளது. இது நாட்டின் கலாசார அடையாளத்தை மீட்டெடுப்பதில் ஒரு பெரிய சாதனை. மேலும், இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பதிலும் ஏ.எஸ்.ஐ.க்கு பொறுப்புள்ளது. உலகளாவிய கலாசார பாரம்பரியத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்றாா் அமைச்சா்.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி... மேலும் பார்க்க

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: தில்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தேசியத் தலைநகா் தில்ல முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா் காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச... மேலும் பார்க்க