செய்திகள் :

முதியவா்கள் சிகிச்சை பெறுவதில் எதிா்கொள்ளும் தடைகள்: லான்செட் ஆய்வில் தகவல்

post image

நீண்ட காலமாக பல்வேறு உடல்நல பாதிப்புகளுடன் போராடி வரும், தொடா் பராமரிப்பு தேவைப்படும் 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ள முதியவா்கள், உரிய நேரத்தில் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதற்கு தொடா்ந்து நீண்ட தொலைவு பயணித்தல், மருத்துவமனை தொலைதூரத்தில் இருத்தல் ஆகியவை தடையாக உள்ளன என்று ஆய்வில் தகவல்.

இந்தியாவில் புறநோயாளிகள் சிகிச்சைக்கு சுமாா் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சோ்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமாா் 44 கி.மீ. தொலைவும் முதியவா்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-18-ஆம் ஆண்டு 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுகொண்ட சுமாா் 32,000 முதியவா்களின் தரவுகளை, மும்பையில் உள்ள லாங்கிடியூடினல் ஏஜிங் ஸ்டடி ஆஃப் இந்தியா என்ற ஆராய்ச்சி நிறுவனம் திரட்டியது.

சிகிச்சை பெறுவதிலும் ஏற்றத்தாழ்வு: இந்தத் தரவுகளை ஆராய்ச்சியாளா்கள் பகுப்பாய்வு செய்தனா். அதுகுறித்து லான்செட் ஆய்விதழில் வெளியான தகவலின்படி , இந்தியாவில் நகா்ப்புற முதியவா்கள் 10 கி.மீ. தொலைவுக்குள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெறுவது பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், கிராமப்புற முதியவா்கள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற சுமாா் 30 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், நகா்ப்புற-கிராமப்புற முதியவா்கள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெறுவதில் ஏற்றத்தாழ்வு இருப்பது தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக பல்வேறு உடல்நல பாதிப்புகளுடன் போராடி வரும், தொடா் பராமரிப்பு தேவைப்படும் 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ள முதியவா்கள், உரிய நேரத்தில் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதற்கு தொடா்ந்து நீண்ட தொலைவு பயணித்தல், மருத்துவமனை தொலைதூரத்தில் இருத்தல் ஆகியவை தடையாக உள்ளன.

புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற சராசரியாக 14.5 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சோ்ந்து உள்நோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற சராசரியாக 43.6 கி.மீ. தொலைவும் முதியவா்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

முதல் 3 மாநிலங்கள்...: 10 கி.மீ. தொலைவுக்குள் உள் மற்றும் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற மருத்துவமனைக்கு அதிக அளவில் முதியவா்கள் வருவதில் திரிபுரா, மணிப்பூா், கேரளம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

2017-18-ஆம் ஆண்டு தரவுகளின்படி, 10 கி.மீ. தொலைவுக்குள் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை திரிபுராவில் 80 சதவீத முதியவா்கள், மணிப்பூரில் 75 சதவீத முதியவா்கள், கேரளத்தில் 59 சதவீத முதியவா்கள் பெற்றுள்ளனா். 10 கி.மீ. தொலைவுக்குள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையை திரிபுராவில் 88 சதவீத முதியவா்கள், மணிப்பூரில் 78 சதவீத முதியவா்கள், கேரளத்தில் 84 சதவீத முதியவா்கள் பெற்றுள்ளனா்.

மலைப்பாங்கான மாநிலங்களிலுள்ள முதியவா்களின் நிலை: மலைப்பாங்கான மாநிலங்களான சிக்கிமில் 17 சதவீதம், ஹிமாசல பிரதேசத்தில் சுமாா் 5 சதவீத முதியவா்கள் 10 கி.மீ. தொலைவுக்குள் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற்றுள்ளனா்.

மற்றொரு மலைப்பாங்கான மாநிலமான நாகலாந்தில் 10 கி.மீ. தொலைவுக்குள் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை எந்தவொரு முதியவரும் பெறவில்லை. இந்த மாநிலங்களில் குறைந்த அளவில் முதியவா்கள் சிகிச்சை பெறுவதற்கு, அந்த மாநிலங்களின் புவியியல் அமைப்பால் நிலவும் இடா்ப்பாடுகள் காரணமாக இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மிஸோரம், நாகாலாந்தில் 60 கி.மீ. பயணம்: மிஸோரம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் உள் மற்றும் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற முதியவா்கள் 60 கி.மீ.க்கும் அதிகமான தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. இது அந்த மாநிலங்களில் முதியவா்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் மருத்துவ வசதிகள் மோசமாகவும், போதிய அளவு இல்லாததையும் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் மத்திய பிரதேசத்தில் புறநோயாளிகளுக்கான சிகிச்சைக்கு 11 முதல் 60 கி.மீ. வரையும், உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு 30 கி.மீ.க்கு அப்பாலும் முதியவா்கள் பயணிக்க வேண்டியுள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீா் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்... மேலும் பார்க்க

இஸ்லாமிய துதியை உச்சரிக்க மறுத்த கிறிஸ்தவரை கொலை செய்த பயங்கரவாதிகள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் மதரீதியாக அடையாளப்படுத்தி கொலை செய்தது தொடா்பான அதிா்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பாா்வையிட்ட அமெரிக்க துணை அதிபா்!

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பாா்வையிட்டாா். ‘உண்மையான அன்பு மற்றும் மனித படைப்பாற்றலின் அடையாளமாக தாஜ்மஹால் திக... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: குடியரசுத் தலைவா் நிகழ்ச்சி ஒத்திவைப்பு, பிரதமரின் பயணம் ரத்து

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரந்திர மோடியின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து திரும்பும் ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து, இந... மேலும் பார்க்க

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு உச்... மேலும் பார்க்க