செய்திகள் :

Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த 5 அதிரடி முடிவுகள்

post image

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று (ஏப்ரல் 22) கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இந்திய கடற்படை அதிகாரி என 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவோடு இரவாக ஸ்ரீநகருக்கு விரைந்த முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் தீவிரவாதத் தாக்குதல் பற்றி ஆலோசனை நடத்தினார்.

Pahalgam Attack
Pahalgam Attack

மறுபக்கம், பிரதமர் மோடியும் சவுதி பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார். அதோடு, தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் இன்று (ஏப்ரல் 23) மாலை 7 மணியளவில் தனது தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று மோடி ட்வீட் செய்தார்.

அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் டெல்லியில் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உட்பட துறை சார் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. இந்த நிலையில் கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

மோடி தலைமையிலான கூட்டம்
மோடி தலைமையிலான கூட்டம்

5 முக்கிய முடிவுகள்:

1) சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து.

2) வாஹா - டாரி எல்லை உடனடியாக மூடப்படும்.

3) சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) விசாவின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதி கிடையாது. பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

4) டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாதுகாப்பு / கடற்படை / விமான ஆலோசகர்களை இந்தியா திரும்பப் பெறுகிறது. மேலும், இந்தப் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, ஆலோசகர்களின் 5 துணை அதிகாரிகளும் இரு தூதரகங்களிலிருந்தும் வெளியேற்றப்படுவர்.

5) தூதரகங்களிலுள்ள மொத்த 50 இடங்கள் 30- ஆகக் குறைக்கப்படும். மே 1 முதல் இது நடைமுறைக்கு வரும்.

இவை தவிர, முப்படைகளையும் தயாராக இருக்கும்படி கூறியிருக்கும் மத்திய அரசு, நாளை ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நேற்று நடைபெற்ற தீவிர தாக்குதலில் 25 இந்தியர்களும், 1 நேபாள நபரும் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

Pahalgam Attack: ``என் வாழ்வில் சிறந்த மனிதர்..'' - திருமணமான 4 நாளில் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2... மேலும் பார்க்க

Pahalgam Attack: "விரைவில் தீவிரவாதிகளைப் பிடிப்போம்; தக்க பதிலடி கொடுக்கப்படும்..." - ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்த... மேலும் பார்க்க

சமாதானபுரம்: அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுமா? - வெயிலில் சிரமப்படும் பயணிகள்

திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதியான சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வல்லநாடு, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்குச் செல்... மேலும் பார்க்க

`மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமில்லை; ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்!’ - பட்னாவிஸ் பதில்

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா கல்வியாளர்களும் இத்திட்டத்திற்... மேலும் பார்க்க

Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள்!

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள (Pahalgam) சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க

PTR: `அது அவருக்கே பலவீனமாக மாறிவிடும்; புரிந்துக் கொள்வார் என...' - பி.டி.ஆருக்கு ஸ்டாலின் அறிவுரை!

நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்... மேலும் பார்க்க