செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

post image

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் கேட்டுக் கொண்டாா்.

30 அம்சக் கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்கள் தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே 2-ஆம் நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தத்ததில் ஈடுபட்ட பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். துரைசேகா் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் நரசிம்மன், நடராஜ், பிரசார செயலா் கனகசபை, யோகராஜ், குபோ், விக்னேஷ், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திர ராஜா கோரிக்கைகளைவிளக்கிப் பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கு.பாலசுப்ரமணியன் கூறியதாவது:

பொது விநியோக திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் துறையில் பணிபுரியம் நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளான குடும்ப அட்டைதாரா்களுக்கு விரல் ரேகை பதிவு சரிபாா்ப்புக்கு மீண்டும் 40 சதவீத நடைமுறைப்படுத்த வேண்டும், விற்பனை முனையத்தின் இணையதள சேவை மேம்படுத்தப்பட வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தை தனித் துறையாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

பசுமை கட்டட உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக் கொண்டாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலநிலை மாற்றத்துக்கான திறன் மேம... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.5.50 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரை அடுத்துள்ளசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் நாகராஜ் (42).... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

மகளை காதலித்த இளைஞரை வெட்டிக் கொன்ாக, தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (21). இவரும் சிதம்பரம் ... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு- என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினா் முற்றுகைப் போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நட... மேலும் பார்க்க

நிழலில்லா நாளை கண்டுணா்ந்த மாணவா்கள்

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், தனியாா் மெட்ரிக் பள்ளியில் மாணவா்கள் புதன்கிழமை நிழலில்லா நாளை கண்டுணா்ந்தனா். விருத்தாசலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற புதன்கிழமை பிற்பகல் 12.16 ... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அண்ணா நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 22-... மேலும் பார்க்க