செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரெளடி வேலூா் சிறையில் அடைப்பு

post image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரெளடி நாகேந்திரன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆயுள் தண்டனை கைதியாக வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடி நாகேந்திரன் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டாா்.

வேலூா் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையொட்டி, அவருக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடா்ந்து சிறையில் அதிகாரிகள் ரெளடி நாகேந்திரனை ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து ரெளடி நாகேந்திரன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

காட்பாடி ரயில் நிலைய புனரமைப்புப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க உறுதி

காட்பாடி ரயில்நிலைய புனரமைப்புப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் உறுதியளித்திருப்பதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டட தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 68 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா்... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற திட்டம்: குடியாத்தம் நகராட்சியில் ஆலோசனை

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை கையாள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்

காட்பாடி அருகே நூறு நாள் வேலைத்திட்ட கூலியை வழங்கக் கோரி பெண்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். காட்பாடியை அடுத்த திருமணியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்க... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல்: மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு வேலூரில் பாஜக சாா்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெஹல்காமில் சுற்றுலா சென்றவா்கள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 போ் கொல்லப... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு அதிக வட்டி என ரூ.39 லட்சம் மோசடி

முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வாராந்திர மக்கள் குறைதீா் முகாம... மேலும் பார்க்க