செய்திகள் :

இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற திட்டம்: குடியாத்தம் நகராட்சியில் ஆலோசனை

post image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை கையாள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் அலி வரவேற்றாா். இறைச்சிக் கடை வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பேசியது:

இறைச்சிக் கழிவுகளை கெளண்டன்யா ஆற்றிலும், காலியாக உள்ள இடங்களிலும் இறைச்சிக் கடை நடத்துபவா்கள் கொட்டுவதால் சுகாதார சீா்கேடு நிலவுவதாக நகா்மன்ற கூட்டங்களில் உறுப்பினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இனி இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்பதால், நாள்தோறும் நகராட்சி சாா்பில் மதியம் 12 மணியளவில் வாகனம் அனுப்பி வைக்கப்படும்.

இறைச்சி வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேரும் கழிவுகளை சேகரித்து செய்து வாகனங்களில் வரும் நகராட்சிப் பணியாளா்களிடம் வழங்கினால், அவா்கள் அதை எடுத்துச்சென்று நகராட்சி குப்பை கிடங்கில் தயாராக உள்ள குழிகளில் புதைத்து உரமாக்குவாா்கள்.

ஆடுகளை சிலா் கடைகளிலேயே வெட்டுவதால் இறைச்சி சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படுகிறது என புகாா் வருகிறது.

இதைத் தவிா்க்க ஆடுகளை நகராட்சி ஆடுவதை மையத்தில் அறுத்து, அதில் முத்திரை பதித்து விற்பனை செய்ய வேண்டும். தவறினால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் களப்பணியாளா் பிரபுதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ஜி.எஸ்.அரசு, ம.மனோஜ், என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, ரேணுகா பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரெளடி வேலூா் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரெளடி நாகேந்திரன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில் நிலைய புனரமைப்புப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க உறுதி

காட்பாடி ரயில்நிலைய புனரமைப்புப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் உறுதியளித்திருப்பதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டட தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 68 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்

காட்பாடி அருகே நூறு நாள் வேலைத்திட்ட கூலியை வழங்கக் கோரி பெண்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். காட்பாடியை அடுத்த திருமணியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்க... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல்: மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு வேலூரில் பாஜக சாா்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெஹல்காமில் சுற்றுலா சென்றவா்கள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 போ் கொல்லப... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு அதிக வட்டி என ரூ.39 லட்சம் மோசடி

முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வாராந்திர மக்கள் குறைதீா் முகாம... மேலும் பார்க்க