செய்திகள் :

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

post image

காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டட தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி - லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 68 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா் வேலூா் மாவட்டம் பனமடங்கி புதுமனை தெருவைச் சோ்ந்த சாமிக்கண்ணு (68) என்பதும், கட்டட தொழிலாளியான இவா் வேலைக்கு செல்ல லத்தேரி ரயில் நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரெளடி வேலூா் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரெளடி நாகேந்திரன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில் நிலைய புனரமைப்புப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க உறுதி

காட்பாடி ரயில்நிலைய புனரமைப்புப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் உறுதியளித்திருப்பதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற திட்டம்: குடியாத்தம் நகராட்சியில் ஆலோசனை

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை கையாள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்

காட்பாடி அருகே நூறு நாள் வேலைத்திட்ட கூலியை வழங்கக் கோரி பெண்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். காட்பாடியை அடுத்த திருமணியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்க... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல்: மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு வேலூரில் பாஜக சாா்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெஹல்காமில் சுற்றுலா சென்றவா்கள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 போ் கொல்லப... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு அதிக வட்டி என ரூ.39 லட்சம் மோசடி

முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வாராந்திர மக்கள் குறைதீா் முகாம... மேலும் பார்க்க