செய்திகள் :

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

post image

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையை மூட மத்திய அரசு நேற்று (ஏப்.23) இரவு உத்தரவிட்டது.

இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டதுடன், அந்நாட்டிலுள்ள இந்தியர்களைத் தாயகம் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உரிய ஆவணங்களுடன் அட்டாரி - வாகா எல்லையைக் கடந்த நபர்கள் இந்தியாவுக்கு வரும் மே.1 ஆம் தேதிக்குள் திரும்பிவர உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷைத்தன் சிங் என்ற இளைஞருக்கு இன்று (ஏப்.24) பாகிஸ்தானில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக, அவர் தனது குடும்பத்தினருடன் அட்டாரி - வாகா எல்லை வழியாக இன்று பாகிஸ்தான் செல்லவிருந்தார்.

ஆனால், தற்போது அந்த எல்லையானது மூடப்பட்டதினால் அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவரது சகோதரரான சுரீந்தர் சிங் கூறுகையில், அவர்களது பாட்டியும் அவரது மூன்று மகன்கள் பாகிஸ்தானிலும், ஒரு மகன் மட்டும் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார்.

மேலும், ஷைத்தன் சிங்கின் திருமணத்திற்காக இன்று அவர்கள் பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் தற்போது அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் செய்தது மிகவும் தவறான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தெலங்கானாவில் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் தெலங்கானா காவல் துறை உயர் அதிக... மேலும் பார்க்க

'பயங்கரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை' - பிரதமர் மோடி பேச்சு!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையைப் பெறுவார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு ... மேலும் பார்க்க

5 பயங்கரவாதிகள், 3 இடங்கள், 10 நிமிட துப்பாக்கிச் சூடு! பஹல்காமில் நடந்தது என்ன?

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் எப்படி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதி 'மினி சுவிட்சர்லாந்து' ... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பினார் துணை அதிபர் வான்ஸ்!

இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாயகம் திரும்பியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக அந்நாட்டு துணை ... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன் போராட்டம்!

பஹல்காம் தாக்குதலையடுத்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பக... மேலும் பார்க்க

பஹல்காம்: 65 சுற்றுலாப் பயணிகள் மும்பை வந்தடைந்தனர்!

ஜம்மு-காஷ்மீரில் சிக்கித் தவித்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு மும்பை வந்தடைந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்ப... மேலும் பார்க்க