செய்திகள் :

தெலங்கானாவில் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

post image

தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் இன்று (ஏப்.24) சரணடைந்துள்ளதாக வாராங்கல் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடையும் மாவோயிஸ்டுகளுக்காக அரசு கொண்டு வந்துள்ள மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்களைப் பற்றி அறிந்த மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியைக் கைவிட்டு அரசிடம் சரணடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிகழாண்டில் (2025) பல்வேறு படைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். மேலும், 12 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், சரண்டைந்துள்ள பெரும்பாலான மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாதுகாப்புத் தோல்வி! பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

இந்தியாவுடன் போர்? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்!

பெஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை போராகக் கருதுவதாக பாகிஸ்தான் கூறுகிறது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பதில் ... மேலும் பார்க்க

இந்தியப் போர்க்கப்பலின் ஏவுகணைச் சோதனை வெற்றி!

இந்தியக் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத் வெற்றிகரமாக ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது.இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையிலிருந்து... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில்... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: அமர்நாத் ஆன்மிகப் பயணம் ரத்து!

பெஹல்காம் தாக்குதலை எதிர்த்து, பாகிஸ்தான் தூதரகம் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பயங... மேலும் பார்க்க

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் ப... மேலும் பார்க்க

வான்வெளியைப் பயன்படுத்தத் இந்திய விமானங்களுக்கு தடை: பாகிஸ்தான்

இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.தொடர்ந்து, இந்தியாவுட... மேலும் பார்க்க