செய்திகள் :

ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்

post image

ரோஹித் சர்மா உலகத் தரத்திலான வீரர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 15.4 ஓவர்களில் எட்டி அசத்தியது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் (8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

உலகத் தரத்திலான வீரர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய டிரெண்ட் போல்ட், ரோஹித் சர்மா உலகத் தரத்திலான வீரர் எனவும், மும்பை அணிக்காக அவர் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள அனைவருமே உலகத் தரத்திலான வீரர்கள் என நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக, ரோஹித் சர்மா போன்ற வீரருக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆனால், ரோஹித் சர்மா சரியான நேரத்தில் அணிக்கு அவரது பங்களிப்பை வழங்கி வருகிறார். மீதமுள்ள போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளார் என்றார்.

இதையும் படிக்க: சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான அபார வெற்றியின் மூலம் மும்பை அணியின் நெட் ரன் ரேட் உயர்ந்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் 3-வது இடத்துக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க... மேலும் பார்க்க

ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: டேனியல் வெட்டோரி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட... மேலும் பார்க்க

அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லாசித் மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட... மேலும் பார்க்க

சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 8இல் 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 10 புள்ளிக... மேலும் பார்க்க

என் பேட்டிங் வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டார் பேட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா தினேஷ் கார்த்திக் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டி... மேலும் பார்க்க

தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் நேற்றிரவு (ஏப்.23) வீழ்த்தியது.முதலில் ஹைதராபாத் 20 ... மேலும் பார்க்க