பஹல்காம் தாக்குதல்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு!
ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: டேனியல் வெட்டோரி
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான டிராவிஸ் ஹெட் (0 ரன்), அபிஷேக் சர்மா (8 ரன்கள்), இஷான் கிஷன் (1 ரன்), நிதீஷ் ரெட்டி (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
தவறாக கணித்துவிட்டோம்
மும்பைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது. நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். போட்டிக்கான ஆடுகளம் முன்பு இருந்ததைப் போன்று இல்லை. இந்த ஆடுகளத்தில் 250 - 280 ரன்கள் குவிக்க முடியும் என நினைத்தோம். ஆனால், ஆடுகளத்தில் மிகப் பெரிய மாற்றம் இருந்தது.
இதையும் படிக்க: அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!
முதல் இரண்டு ஓவர்களை கடந்த பிறகு, இந்த ஆடுகளத்தில் 250 - 260 ரன்கள் குவிக்க முடியாது என்பதை உணர்ந்தோம். பவர் பிளேவை பயன்படுத்திக் கொண்டு அதிக ரன்கள் எடுக்க நினைத்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம். ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை என்பதை உணர்ந்தவுடன், 180 ரன்கள் எடுக்கும் அளவுக்கு விளையாட வேண்டும் என நினைத்தோம். ஆனால், விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த ரன்களை குவிக்க முடியவில்லை என்றார்.