செய்திகள் :

சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா

post image

ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணி 8இல் 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கிறது.

சொந்த மண்ணில் நடைபெற்ற அனைத்து போட்டிகளில் இந்த சீசனில் ஆர்சிபி தோல்வியுற்ற நிலையில் இன்றிரவு (ஏப்.24) சின்னசாமியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சொந்த மண்ணில் தோல்வியுறும் சாபத்தை முறியடிப்பாரா ரஜத் படிதார் என ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ரஜத் படிதார் வெற்றிக்கு காரணம் என்ன?

ரஜத் படிதார் குறித்து ஜிதேஷ் சர்மா பேசியதாவது:

ரஜத் மிகவும் எளிமையானவர். டிரெஸ்சிங் ரூமில் (ஓய்வறை) அவர் இருப்பதே தெரியாது. ஆனால், மைதானத்தில் காலடி வைக்கும்போதுதான் அவர் கேப்டன் என்று உணர்வீர்கள்.

ரஜத் படிதார் அழுத்தமான தருணங்களிலும் அமைதியாகவே இருப்பார். நான் விக்கெட் கீப்பராக அவரிடம் யோசனைகளை கூறினால், உடனே கேட்டு ‘இது நடந்தால் என்ன செய்யலாம்?’ என்று கேட்பார். இதுதான் அவர் வெற்றியாளராக இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

சின்னசாமியில் காத்திருக்கும் சவால்

ரஜத் படிதாருக்கு இன்னும் ஒரு பெரிய சவால்தான் இருக்கிறது. இந்த சீசனில் சின்னசாமியில் எங்களின் முதல் வெற்றியைப் பெற வேண்டும். ஆனால், நம்பிக்கை மட்டும் மிகவும் பலமாக இருக்கிறது

எனக்கு தோன்றுவது என்னவென்றால் உங்கள் உள்ளுணர்வை நம்புவதே முக்கியம்.

விளையாட்டு மிகவும் வேகமாக நகரும். யோசிக்க நேரமே இருக்காது. என்ன சிந்தனை வந்தாலும், அதை நம்பி செயல்பட வேண்டும். உங்கள் உள்ளம் சொல்வதையே கேளுங்கள் என்றார்.

17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணியாக இருக்கும் ஆர்சிபிக்கு ரஜத் படிதார் கோப்பையை வென்று தருவாரென பலரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்

ரோஹித் சர்மா உலகத் தரத்திலான வீரர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ... மேலும் பார்க்க

அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லாசித் மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட... மேலும் பார்க்க

என் பேட்டிங் வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டார் பேட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா தினேஷ் கார்த்திக் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டி... மேலும் பார்க்க

தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் நேற்றிரவு (ஏப்.23) வீழ்த்தியது.முதலில் ஹைதராபாத் 20 ... மேலும் பார்க்க

5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் ஹைதராபாத் 20 ஓவா்கள... மேலும் பார்க்க

போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் எடுத்தது.ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்ட... மேலும் பார்க்க