செய்திகள் :

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத்தடை!

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சாலையில் போகிற, வருபவர்கள் எல்லாம் குழு அமைப்பது குறித்து கேள்வி கேட்பதாகவும், கே.சி.பழனிசாமி கட்சியிலேயே கிடையாது எனவும், ஓ.பன்னீர்செல்வத்துடன் சோ்ந்துவிட்டதாகவும் அவர் பதில் அளித்தார்.

இதையடுத்து, எடப்பாடி கே.பழனிசாமி மீது கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கோவை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதித்துறை நடுவர் என்.கோபாலகிருஷ்ணன், இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்குரைஞர் ஆஜரானதையடுத்து, இதன் விசாரணையை நீதிபதி கோபால கிருஷ்ணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், கோவை நீதிமன்றத்தில் இபிஎஸ் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜராகுவதில் விலக்கு அளித்தும், இவ்வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை வித்தும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தானியர்களின் விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி?

அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்திருப்பதாக கட்சி பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக மா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தம்? முதல்வருக்கு பாராட்டு விழா!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவிருப்பதாக பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சட்டப் பேரவையில் இன்று (ஏப். 24) ஒரு சில முக்கிய பிரச்னைகள் வ... மேலும் பார்க்க

அக்னி நட்சத்திரம் எப்போது?

தமிழ் நாள்காட்டியில் குறிப்பிடப்படும் கத்தரி வெய்யில் என்கிற அக்னி நட்சத்திரம் இந்தாண்டு எப்போது தொடங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் வெய்யில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வ... மேலும் பார்க்க

4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி வெய்யில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெய்யில் கொளுத்தி வர... மேலும் பார்க்க

மற்றொரு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தர... மேலும் பார்க்க