செய்திகள் :

திருப்பூர் அரசு மருத்துவமனை: சிகிச்சைக்குப் பயந்த இளைஞர்; 4-வது மாடியில் இருந்து குதித்து பலி

post image

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). இவர், மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு பணிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயில் வந்து கொண்டிருக்கும்போது ஓடும் ரயிலில் இருந்து விபாஸ் பன்வான் குதித்துள்ளார். இதில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தக் கயங்களுடன் மீட்டுகப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபாஸ் பன்வான் அனுமதிக்கப்பட்டார்.

விபாஸ் பன்வான்

இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு புதிய கட்டடத்தில் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவில் விபாஸ் பன்வான் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அங்கு சிகிச்சைக்குப் பயந்த விபாஸ் பன்வான் அங்கிருந்து வெளியேற நினைத்தார். அப்போது அங்கு காவலர்கள் இருந்ததால், 4-ஆவது மாடிக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே வெளியே செல்ல முடியாமல் சுமார் 2 மணி நேரமாக நான்காவது மாடியிலேயே இருந்த விபாஸ் பன்வான், தன்னை பிடித்து மீண்டும் சிகிச்சைக்கு சேர்த்துவிடுவார்களோ என்று பயந்து, அவசர, அவசரமாக தப்பிக்கும்போது எதிர்பாராத விதமாக 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

அங்கிருந்தவர்கள் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தெற்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் விபாஸ்பன்வான் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``எல்லா வலியை தாங்கியும் அது நடக்கல..'' - கீர்த்திகா உடலை பார்த்து அக்கா, தம்பி கதறிய சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ... மேலும் பார்க்க

TASMAC: போதையில் கோஷ்டி மோதல்; மது பாட்டிலால் அடித்து இளைஞர் படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி

திருச்சி, கோட்டை காவல் சரகத்திற்கு உள்பட்ட தேவதானம் பகுதியில் அரசு மதுபான கடையோடு இணைந்த பார் ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் சஞ்சீவி நகரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகன் கற்குவேல் (வயது: 44) ... மேலும் பார்க்க

புதுச்சேரி அதிகாரியிடம் அந்தரங்க வீடியோவைக் காட்டி மிரட்டல்; 3 பெண்கள் கைது; பின்னணி என்ன?

புதுச்சேரி மின்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவருடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், இருவரும் சந்திக்கலாம் என முடிவு... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பன்; கொன்று வீட்டில் புதைத்த அண்ணன்; என்ன நடந்தது?

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன். மீன்பிடித்தல் உள்ளிட்ட கூலி வேலை செய்து வருபவர்.இவரைக் கடந்த மார்ச் 30-ம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரி ராணி என்பவர், சில நாட்களுக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack : சிறுவயது நண்பர்களின் முதல் பயணம்... இறுதிப்பயணமாக மாறிய சோகம் - நடந்தது என்ன?

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் மும்பை டோம்பிவலியை சேர்ந்த சஞ்சய் லீலா, அதுல் மோனே, ஹேமந்த் ஜோஷி ஆகியோர் உயிரிழந்தனர்.... மேலும் பார்க்க

சென்னை: பெட்டிக்கடை பெண்ணிடம் செயின் பறிப்பு; கைவரிசை காட்டிய தம்பதியை மடக்கிப் பிடித்த மக்கள்!

சென்னை கே.கே.நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரின் மனைவி காந்தா (52). இவர்கள் மணப்பாக்கம், பார்த்தசாரதி நகரில் காய்கறி, கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேத... மேலும் பார்க்க