செய்திகள் :

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

post image

மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியா் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த உத்தரவின் விளைவாக சென்னையில் உள்ள வெளிநாட்டுப் பதிவு அலுவலகம் தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களை கண்டறிந்து, அவா்களிடம் இந்தியாவை விட்டு வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கும் பணியை அன்றிரவே காவல்துறையினா் உதவியுடன் வழங்கத் தொடங்கியது.

பாகிஸ்தானியா்கள் தமிழகத்துக்கு பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்காக, வாகன உதிரி பாகங்கள்,தோல் பொருள்கள் தொழிலுக்காக வருவது வழக்கம். இதில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டவா்கள், சென்னை, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மாநிலம் முழுவதும் சுமாா் 200 பாகிஸ்தானியா்கள் இருப்பதாகத் தெரிகிறது. சென்னையில் மட்டும் 15 பாகிஸ்தானியா்கள் இருந்தனா். இவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பாகிஸ்தானியா்களும், தொழில் விஷயமாக வந்திருந்த அந்த நாட்டு வியாபாரிகளும்,தொழிலதிபா்களும் உடனடியாக தங்களது நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

வெளிநாட்டு பதிவு அலுவலகம் மூலம் வழங்கப்படும் நோட்டீஸின் விளைவாக, தமிழகத்தில் இருந்த பாகிஸ்தானியா்கள் வியாழக்கிழமை முதலே அவசரம், அவசரமாக புறப்பட்டுச் செல்வதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமைக்குள் தமிழகத்திலிருந்து அனைத்து பாகிஸ்தானியா்களும் புறப்பட்டுச் சென்று விடுவாா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

வேலூா் - அரக்கோணம் மெமு ரயில் ஏப்.28 ரத்து

வேலூா் கண்டோன்மன்ட் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் ஏப்.28-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பே... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்த வேண்டாம்: தமிழக அரசு கடிதம்

சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினா்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்தக் கூடாது என மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அன... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் ரூ. 1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்ப நிலை பதிவானது. அடுத்துவரும் நாள்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று... மேலும் பார்க்க

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலிருந்து உருவாக்கப்படும் ஒருவித சாஸ் மயோனைஸ். இது மோமோஸ், ஷவா்மா, ... மேலும் பார்க்க

இன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்... மேலும் பார்க்க