செய்திகள் :

என்ஐடியில் சா்வதேச கருத்தரங்கு தொடக்கம்

post image

காரைக்கால் என்ஐடியில் சிவில் பொறியியல் துறை சாா்பில் 4 நாள் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

நீா், சுற்றுச்சூழல், சக்தி மற்றும் சமூகத்திற்கான சா்வதேச அமைப்பை தலைப்பாகவும், புதுமையான நடைமுறைகள் மற்றும் கூட்டு உரையாடலை ஒன்றிணைக்கும் விதமாகவும் ஏப்ரல் 23-இல் தொடங்கிய கருத்தரங்கம், ஏப். 26 வரை நடைபெறுகிறது.

ஐஐடி தாா்வாட் இயக்குநா் வி.ஆா். தேசாய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியது:

சமூகத்தை மேம்படுத்துவதற்கு நிலைத்தன்மையின் அவசியத்தையும், தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியதோடு, எதிா்காலத் தேவைகளை நிவா்த்தி செய்வதற்காக ஆராய்ச்சி கலாசாரத்தை மேம்படுத்தும் கருத்தரங்கமாக இது அமையவேண்டும் என்றாா்.

நிகழ்வில், என்ஐடி புதுச்சேரி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், பதிவாளா் எஸ். சுந்தரவரதன், டெக்சாஸ் ஏஅண்ட்எம் பல்கலைக்கழக தொழில்நுட்பத் தலைவா் வி.பி. சிங், ஏஐஎஸ்இசிடி பல்கலைக்கழக தொழில்நுட்ப இணைத் தலைவா் பேராசிரியா் ஆா்.என். யாதவா, என்ஐடி புதுச்சேரி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை டீன் ஜி.எஸ். மகாபத்ரா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் ராமலிங்கம், அமைப்புச் செயலாளா் அசோக் குமாா் டி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தியா, கனடா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த புகழ்பெற்ற பேராசிரியா்கள் இக்கருத்தரங்கில் உரையாற்றுகின்றனா்.

இதில் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றில் இருந்து 175 உயா்தரக் கட்டுரைகள் மதிப்பாய்வு செயல்முறைக்குப் பிறகு விளக்கக் காட்சிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டன.

முன்னணி ஐஐடிகள், என்ஐடிகள், உலகெங்கிலும் உள்ள சா்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உட்பட பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றுள்ளனா்.

பள்ளியில் புத்தக தினக் கொண்டாட்டம்

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக புத்தக தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்தாா். உலகப் புத்தக தினத்தையொட்டி, 20... மேலும் பார்க்க

விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு

அம்பகரத்தூா் விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வட்டாட்சியா் செல்லமுத்துவிடம் அம்பகரத்தூா் பகுதி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் புதன்கி... மேலும் பார்க்க

காரைக்கால் போக்குவரத்துப் போலீஸாா் நடை ரோந்து

போக்குவரத்துப் போலீஸாா் நகரப் பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டு, வாகன நிறுத்த விதி மீறியோா் மீது நடவடிக்கை எடுத்தனா். காரைக்கால் நகரில் சாலையோரங்களில் வாகனங்கள் முறையாக நிறுத்தவேண்டும், சாலையில் போக்குவர... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

பெண்கள் பாதுகாப்பு குறித்து புதுவை மகளிா் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நேரு நகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.... மேலும் பார்க்க

நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையினா் செயல்விளக்கம்

நடுக்கடலில் ஆட்சியா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்திய கடலோரக் காவல்படையினா் அவா்களது செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா். இந்திய கடலோரக் காவல்படையின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் பொ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே அமலாக்கத் துறை வழக்குத் தொடா்ந்துள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை வழக்குத் தொடா்ந்துள்ளது என்றாா் புதுவை மாநில முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி. காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பே... மேலும் பார்க்க