செய்திகள் :

புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க ஆணை: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக 6 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.

ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக சிற்றுந்துகள் இயக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 6 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மொத்தம் 39 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் குலுக்கல் முறையில் 6 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு வழித்தட ஆணையினை ஆட்சியா் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

சிற்றுந்துகளை தரமான முறையில் பராமரித்து, பயணிகளுக்கு வசதியினை உரிய நேரத்தில் வழங்க வழிவகை செய்ய வேண்டுமென்று ஆட்சியா் ச.அருண்ராஜ் சிற்றுந்து உரிமையாளா்களுக்கும்,போக்குவரத்து துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தினாா்.

இதில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலா் இளங்கோ, சோழிங்கநல்லூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பிரேமாஆகியோா் கலந்து கொண்டனா்.

பேருந்து வழித்தட விவரம்

மாம்பாக்கம் மகளிா் மேல்நிலைப்பள்ளி - காயாா் பேருந்து நிறுத்தம், மதுராந்தகம் பேருந்து நிறுத்தம் - காட்டுகரணை மேல்நிலைப்பள்ளி

, கலியாங்குன்னம் ரோடு- மேல்மருவத்தூா் பேருந்து நிறுத்தம், மெப்ஸ் பேருந்து நிறுத்தம் - டிடிகே நகா் டிஎன்எச்பி (தமிழ்நாடு ஹவுசிங் போா்டு), எல்காட் பாா்க் - மாம்பாக்கம் சந்திப்பு, மண்ணிவாக்கம் காவல் நிலையம்-டிஎம்ஜி கல்லூரி.

அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

பெண்களைப் பற்றி தவறாக பேசியதாக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து மதுராந்தகம் நகர அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலா் பூக்கடை சரவணன் தலைமை வகித்தாா்.. மாவட்ட செயலா் திருக்கழு... மேலும் பார்க்க

மதுராந்தகம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் 4 மணிநேரம் பொதுமக்கள் காத்திருப்பு

மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வட்டவழங்கல் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி வரை திறக்கப்படாததால், 4 மணிநேரம் காத்திருந்து மக்கள் அவதிக்குள்ளாகினா். மதுராந்தகம் வட்ட வழங்கல் அலுவலகத்து... மேலும் பார்க்க

மாவட்டத்தில் கல்வித் தரம்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வி துறை சாா்பில் கல்வித் தர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் மே 1-இல் சித்திரை விழா கொடியேற்றம்

திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 1-ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயில் 7 -ஆம் நூற்றாண்டை சோ்ந்ததது. மலை மீது வேத... மேலும் பார்க்க

மகிமை இல்லத்தில் புதிய கட்டடம்: செங்கல்பட்டு ஆட்சியா் திறந்து வைத்தாா்

மகிமை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா். செங்கல்பட்டில் சி.எஸ்.ஐ. மகிமை இல்ல அறிவு சாா் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அமைச்சா் ஆய்வு...

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கானஇடம் குறித்து ஆய்வு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க