செய்திகள் :

'அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது' - ரஜினி பற்றி சீமான் பேசியது என்ன?

post image

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

நிழற்குடை படக்குழு
நிழற்குடை படக்குழு

வரும் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின்  இசைவெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சீமான் கலந்துகொண்டார்.

அந்நிகழ்வில் தேவயானி குறித்து பேசிய சீமான் , “தேவயானி நடித்தால் நல்ல கதையாகவும், படமாகவும்தான் இருக்கும் என்று மக்களிடம் ஒரு கருத்துப் பதிவு இருக்கிறது. அதற்கு காரணம் அவர் தேர்வு செய்து நடித்தக் கதாபாத்திரங்கள். ‘சூர்யவம்சம்’, ‘காதல் கோட்டை’ என்று ஒவ்வொரு காலத்திலும் ஒரு படத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.

காசுக்காக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அந்த நற்பெயர்தான் 30 வருடங்களுக்கு பிறகு அவரை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார். 

`சாதித்தப் பிறகும்...’

தொடர்ந்து பேசிய அவர், “நிறைய கலைஞர்கள் இந்தத் சினிமாத் திரைதுறைக்கு வந்து வென்றிருக்கிறார்கள். ரஜினிகாந்தை நான் நேரில் சந்தித்து பேசினேன். இரண்டரை மணி நேரம் பேசியிருப்பேன். பல படங்கள் நடித்து சாதித்தப் பிறகும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று  அவருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.

சீமான்

அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது. சோம்பேறிகள் கூட அவர் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்தால் இயங்கிவிடுவார்கள்.

இந்த மாதிரியான தேடலும், வெறியும் இருக்கின்ற ஒவ்வொருவரும் உச்சத்தைத் தொடலாம். சாதிக்கலாம்.  இந்தப் படைப்பில் (நிழற்குடை) நிறைய பேர் பங்காற்றி இருக்கிறார்கள் அவர்களும் நிச்சயம் சாதிப்பார்கள்” என்று பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Nizhal Kudai: ``என் வாழ்க்கையில் அக்கா மாதிரி நபரைப் பார்த்ததே இல்லை..'' - தேவயானி குறித்து நகுல்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜித் கதாநாயகனாகவு... மேலும் பார்க்க

Gangers: "ஒரே சிரிப்பு சரவெடி; வடிவேல் சாரின் மேஜிக்..." - கேங்கர்ஸ் படக்குழுவைப் பாராட்டிய சிம்பு

சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். தவிர மைம் கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில்... மேலும் பார்க்க

What to watch on Theatre: வீர தீர சூரன், Phule, கேங்கர்ஸ், Empuraan; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

கேங்கர்ஸ் (தமிழ்)கேங்கர்ஸ் (தமிழ்)சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, மைம்கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. அரசன் கோட்டையிலுள்ள ஒர... மேலும் பார்க்க

"எவ்வளவோ தொந்தரவுகள் செய்திருக்கிறேன்; ஆனாலும்..." - திருமண நாளில் மனைவிக்கு BMW காரை பரிசளித்த SAC

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பி.எம்.டபுள்யூ காரை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்திருக்கிறார்.இந்த தம்பதி நேற்றைய தினம் தங்களுடைய 52-வது திருமண நாளைக் கொ... மேலும் பார்க்க

``கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது!'' - கேம் சேஞ்சர் பற்றி கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்த... மேலும் பார்க்க