செய்திகள் :

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. அரசு பள்ளிகள் மோசம்: ஆளுநர் ஆர்.என். ரவி

post image

மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மோசமாக இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஏப். 25, 26) என இரு நாள்கள் நடைபெறும் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது.

மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நாம் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் சராசரியை விட அதிகமாக இருக்கிறோம். 6500க்கும் மேற்பட்டோர் பிஎச்டி படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் யுஜிசி நெட் என்ஆர்எஃப் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

அதுபோல, ஏஐஎஸ்இஆர் அறிக்கையின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பாக படிக்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.

பஹல்காம் தாக்குதல்: நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகர பேருந்து சேவை தொடக்கம்!

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஆதம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து முனையம், தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூரிலிருந்து பிராட்வேக்கு பேர... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் வேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்னிந்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி வழக்கு: இருவரைக் காவலில் வைக்க உத்தவு

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்... மேலும் பார்க்க

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் கே சாந்தாராம், சென்னை மருத்துவக் ... மேலும் பார்க்க