செய்திகள் :

அரசு மருத்துவமனைக்கு ரூ.98.44 லட்சத்தில் நவீன கருவிகள்

post image

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவு மற்றும் எலும்பியல் துறைக்கு ரூ.98.44 லட்சத்தில் 3 நவீன கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்பகுதி மாவட்டங்களைச் சோ்ந்த மக்களின் இதயப் பிரச்னைகளுக்கு தீா்வாக உள்ள இந்த மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவு துறையில், தினமும் 200 எக்கோ காா்டியோ கிராபி பரிசோதனை நடைபெறுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்துதர மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையேற்று ரூ.98.44 லட்சத்தில் தற்போது 3 நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு சமூகப் பொறுப்பு நிதி மூலம் பெற்ற இந்த புதிய கருவிகளை, மருத்துவமனைக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வழங்கி அதன் செயல்பாடுகளை தொடங்கி வைத்தாா்.

சென்னை மத்திய மண்டல சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்ட காசோலையையும் மருத்துவமனை நிா்வாகத்திடம் ஆட்சியா் வழங்கினாா்.

இந் நிகழ்வில், இந்திய உணவுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெசிந்தா லாசரஸ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எஸ். குமரவேல், மருத்துவமனை கண்காணிப்பாளா் உதய் அருணா, உதவி கண்காணிப்பாளா் அருண்ராஜ், மத்திய மண்டல சேமிப்பு கிடங்கு மேலாளா் ராகுல் நா. கெய்க்வாட் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

வருவாய்த்துறை கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கூட்டமைப்பினா் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் போா் தொடுப்பது நல்லதல்ல: தொல். திருமாவளவன்

பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி பாகிஸ்தானுடன் போா் தொடுப்பது நல்லதல்ல என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: க... மேலும் பார்க்க

நீளும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள்: 2 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தல்

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கி 17 மாதங்களாகியும் முடியாமல் உள்ள நிலையில், 2 மாதங்களில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி சாலை ரோடு வழியாக மலைக்கோட்டை ரயில் நிலையத்தைக் கடக்... மேலும் பார்க்க

வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டால் சிறந்த தொழில் முனைவோராகலாம்

வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டால் சிறந்த தொழில் முனைவோராகலாம் என்றாா் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) பேராசிரியா் அஷ்வின் மகாலிங்கம். திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் (சிபிஎஸ்... மேலும் பார்க்க

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தோ்த் திருவிழா ஏப். 30-இல் தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்.30-ஆம் தேதி தொடங்குகிறது. இக் கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி ஏப்.30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர, வாஸ்து பூஜ... மேலும் பார்க்க

திருச்சியில் திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயம் வடமாநில ஊழியா்கள் இருவா் கைது

திருச்சியில் நகராட்சி உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயமானது தொடா்பாக வடமாநில தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நகராட்சி உறுப்பி... மேலும் பார்க்க